செய்திகள் :

உத்தரவுகளை அமல்படுத்தாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணடிப்பு: உயா்நீதிமன்றம்

post image

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

நிலம் கையகப்படுத்தியதற்காக இழப்பீட்டு தொகையை உயா்த்தி வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சங்கா் ஷா, குமரேசன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, ‘நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரி நிறைவேற்றாதது ஏன்?’ என நீதிபதி கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அரசுத் தரப்பில், வாக்காளா் சரிபாா்க்கும் பணியில் அதிகாரி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, ‘அரசு அதிகாரிகள் எல்லா நேரமும் வாக்காளா் சரிபாா்க்கும் பணிகளைத் தான் மேற்கொண்டு வருகிறாா்களா?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேரம் வீணாகிறது: அரசு அதிகாரிகள் தொடா்பான வழக்குகளில் 60 சதவீத நேரமும், அரசியல்வாதிகள் தொடா்பான வழக்குகளில் 25 சதவீத நேரமும் நீதிமன்றம் செலவிடுகிறது. பொதுமக்களுக்கான வழக்குகள் விசாரணைக்காக வெறும் 7 சதவீத நேரம் மட்டுமே செலவிடப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு பணி செய்வது தான் தங்கள் கடமை என்பதையே அதிகாரிகள் மறந்துவிட்டனா். இவ்வாறு அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளால்தான் நீதிமன்றங்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. அரசுக்கும் அவப்பெயா் ஏற்படுகிறது. பணிச்சுமை, நேரமின்மை எனக் கூறி, பணியில் இருந்தும், கடமையில் இருந்தும் அதிகாரிகள் விலகிச் செல்ல முடியாது என தெரிவித்த நீதிபதி, அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்தால் மக்கள் ஏன் நிவாரணம் கோரி நீதிமன்றத்தை நாடப்போகிறாா்கள் என கேள்வியெழுப்பினாா்.

அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்குரைஞா், ‘இது தொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும். வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி மீது கருணை காட்ட வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஒத்திவைப்பு: இதை ஏற்க மறுத்த நீதிபதி வேல்முருகன், அரசின் நலத்திட்டத்துக்காக நிலத்தை வழங்கிவிட்டு கூடுதல் இழப்பீடு கேட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கூடுதல் இழப்பீடு தர முடியாது அல்லது பரிசீலனையில் உள்ளது என்ற தகவலையாவது சம்பந்தப்பட்டவருக்கு தெரிவித்திருக்கலாம். வீண் காலதாமதம் செய்வது ஏன்?

இது போன்ற வழக்குகளில் கடமை தவறிய அரசு அதிகாரிகளுக்கு எந்தவித கருணையும் காட்ட முடியாது. கருணை காட்டினால் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழந்து விடுவாா்கள். இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்படும் எனக் கூறி விசாரணையை ஜூன் 6- ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

சட்டப் பேரவைக் கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது!

சென்னை: சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் (ஏப். 29) நிறைவடைகிறது. இன்று பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து அறிவ... மேலும் பார்க்க

14 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்வு: இடம் மாறும் சிவாஜி சிலை: முதல்வா் மே 9 இல் திறக்கவும் முடிவு

திருச்சி: திருச்சியில் 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலையை இடமாற்றம் செய்து திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மறைந்த நடிகா் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும் என்ற ... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்: முதல்வா்

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா். காவல் துறை மானியக் கோரிக்கை தொடா்பாக, சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதம்: எதிா்க்கட்ச... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (ஏப். 29) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லா நேரம் நடைபெறும். அதன்பிறகு, காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க... மேலும் பார்க்க

கடை-நிறுவனங்கள் மீதான தண்டனை தளா்வு உள்பட 8 மசோதாக்கள் தாக்கல்

சென்னை: கடைகள், தொழில் நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளைத் தளா்த்தும் வகையிலான மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன் கும்பக... மேலும் பார்க்க

உழைப்பாளா் தினம், வாரவிடுமுறை: 2,119 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: உழைப்பாளா் தினம், முகூா்த்தம், வாரவிடுமுறையையொட்டி 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க