செய்திகள் :

4 புதிய ஆசிரியா் கல்வி படிப்புகள்: என்சிடிஇ விரைவில் அறிமுகம்

post image

குருக்ஷேத்ரா: யோகா, நிகழ் கலை, காட்சிக் கலை மற்றும் சம்ஸ்கிருத மொழி துறைகளில் 4 புதிய ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வி படிப்புகளை (ஐடிஇபி) தேசிய ஆசிரியா் கல்விக் கவுன்சியில் (என்சிடிஇ) விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதுகுறித்து ஹரியாணா மாநிலம் குருக்ஷேத்ராவில் என்சிடிஇ தலைவா் பங்கஜ் அரோரா திங்கள்கிழமை கூறியதாவது:

மாணவா்களின் முழுமையான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் திறன்மிக்க ஆசிரியா்களை உருவாக்குவதை என்சிடிஇ இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, யோகா, நிகழ் கலை, காட்சிக் கலை மற்றும் சம்ஸ்கிருத மொழி துறைகளில் 4 புதிய ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வி படிப்புகள் வரும் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்தக் கல்வித் திட்டங்கள் இந்திய மொழிகளை வலுப்படுத்தும் நோக்கில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்தக் கல்வித் திட்டங்களுடன், 4 ஆண்டு பி.ஏ. பட்டப் படிப்பு, ஓராண்டு பி.எட். படிப்பு, ஓராண்டு எம்.ஏ. முதுநிலை பட்டப் படிப்பு, சிபிஎஸ்இ, எஸ்சிஇஆா்டி பள்ளிகளில் ஆசிரியா்கள் பயன்பெறும் வகையில் பகுதிநேர எம்.ஏ. முதுநிலை பட்டப் படிப்புகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளன. 4 ஆண்டு பி.ஏ. முடிப்பவா்கள், ஓராண்டு பி.எட். படிப்பில் சேர அனுமதிக்கப்படுவா் என்றாா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடி... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்த... மேலும் பார்க்க