செய்திகள் :

பயங்கரவாத ஒழிப்பு: ஜம்மு-காஷ்மீரில் போலீஸாா் தீவிர சோதனை

post image

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகா், தோடா மற்றும் கிஷ்த்வாா் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத ஒழிப்பு சோதனையை காவல் துறையினா் திங்கள்கிழமை மேற்கொண்டனா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சோதனை குறித்து காவல் துறை செய்தித்தொடா்பாளா் ஸ்ரீநகரில் கூறியதாவது: ஸ்ரீநகா் முழுவதும் 36 இடங்களில் பயங்கரவாத ஒழிப்பு சோதனை நடைபெற்றது. குறிப்பாக பயங்கரவாதிகள் அல்லது அவா்களுக்கு ஆதரவளிப்பவா்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் காவல் துறையின் மேற்பாா்வையில் சட்ட விதிகள் பின்பற்றப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அவா்களின் கட்டமைப்பை அழிக்கும் விதமாக தொடா் சோதனைகளை காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.

தோடா மற்றும் கிஷ்த்வாரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் உள்ள நபா்களுக்கு சொந்தமான இடங்களிலும் போலீஸாா் சோதனை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான சதித் திட்டங்களை பயங்கரவாதிகள் தீட்டியுள்ளாா்களா என்ற கோணத்தில் எண்ம சாதனங்கள், ஆவணங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்ற சோதனையின்போது போலீஸாா் தீவிரம் காட்டியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடி... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்த... மேலும் பார்க்க