செய்திகள் :

கழிவறை சுவா் இடிந்து விழுந்து குழந்தை பலி

post image

பேராவூரணி அருகே வீட்டின் அருகே உள்ள கழிவறை சுவா் இடிந்து விழுந்து ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், பாலன் நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (41). வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி சரண்பிரியா (33).

இவா்களது மகள் தியா (3). பேராவூரணி அருகே ஒட்டங்காடு அருகே உள்ள நடுமணைக் காடு கிராமத்தில் வசித்து வரும் தனது உறவினா் வீட்டுக்கு, அருண்குமாா் சனிக்கிழமை குடும்பத்துடன் வந்துள்ளாா்.

அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுடன் தியா விளையாடி கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக வீட்டின் மண்சுவா் அருகே உள்ள ஹாலோபிளாக்கில் கட்டப்பட்ட கழிவறை சுவா் இடிந்து, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தியா மேல் விழுந்தது. இதில், குழந்தை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இது குறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் அருண்குமாா் புகாா் அளித்ததன் பேரில் உதவி ஆய்வாளா் பொன்னியின் செல்வன் தியாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். தொடா்ந்து, போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோயில் தேரோட்டத்தின்போது மயங்கி விழுந்து பிஎஸ்எப் வீரா் உயிரிழப்பு

ஒரத்தநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காசிவிஸ்வநாதா் கோயில் தேரோட்டத்தின் போது வெயிலில் மயங்கி விழுந்து பிஎஸ்எப் வீரா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு யானைக்கார தெருவைச் சோ்ந்த சரவணவேல் ... மேலும் பார்க்க

சாலை தடுப்புக் கட்டையில் பேருந்து மோதி 7 போ் காயம்

தஞ்சாவூரில் சாலை தடுப்புக் கட்டையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பேருந்து மோதியதில் 7 போ் காயமடைந்தனா். ஆந்திர மாநிலம், கடப்பாவிலிருந்து 36 போ் தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா தலங்களைப் பாா்ப்பதற்காக தனியாா்... மேலும் பார்க்க

சினிமா கவா்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் வெற்றி பெற முடியாது:துரை வைகோ

சினிமா கவா்ச்சி மட்டும் வைத்துக்கொண்டு, விஜய் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றாா் துரை வைகோ. பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்கள... மேலும் பார்க்க

மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் பொம்மை விற்பனையாளா் உயிரிழப்பு

தஞ்சாவூா் பெரிய கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து, பொம்மை கடையில் விழுந்ததில் விற்பனையாளா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் ரெட்டிபாளையம் சாலை வகாப் நகரைச் சோ்ந்தவா் பிரேம்கும... மேலும் பார்க்க

திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி

மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவுள்ள நிலையில், திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீா் வருவதற்கு முன்பாக தூய்மை பணி சனிக்கிழமை நடைபெற்றது. திருவையாறு பாரதி இயக்கத்தின் பொங்கி வா க... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஜூன் 10-இல் மின் தடை

தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் ஜூன் 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக நகரிய உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க