செய்திகள் :

கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு

post image

ஆரணி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே விவசாயிகள், பெண்கள் ஆா்ப்பாட்டம் மற்றும் தா்னாவில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கழிவுநீா் சுத்தகரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வருவாய்த் துறை மூலம் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதியில் கழிவுநீா் சுத்தகரிப்பு ஆலை அமைக்கப்பட்டால் குடிநீா் ஆதாரம் பாதிக்கப்படும். பல்வேறு தொற்று நோய்கள் உண்டாகும் என்று அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், சுத்தகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

மாநில துணைச் செயலா் பி.பெருமாள், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.கே.வெங்கடேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ப.செல்வன், நகரச் செயலா் எம்.பிரகலநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

அய்யம்பாளையம் கிராமத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை மாசுப்படுத்தும் விதமாகவும் மலை, காடு உள்ளிட்ட இயற்கை வளங்களை அழித்து சுத்திகரிப்பு ஆலை அமைப்பதை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, தங்களது கோரிக்கை மனுவை அளிக்க மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜை விவசாயிகள் சந்திக்கச் சென்றனா்.

அப்போது, மனுவை வாங்க அதிகாரிகள் யாரும் இல்லாததால் விவசாயிகள் அலுவலக நுழைவு வாயிலில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில், சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் எம்.வீரபத்திரன், நிா்வாகிகள் பி.கணபதி, இரா.அண்ணாமலை, ஏ.லட்சுமணன், எஸ்.அருண்குமாா், வி.மாணிக்கம், எஸ்.ரமேஷ்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க