செய்திகள் :

காங்கயம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது

post image

காங்கயம் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து வீதியில் விழுந்தது.

காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 முதல் மாலை 5 மணி வரை பரவலாக பலத்த மழை பெய்தது. அப்போது மழையுடன் காற்றும் வீசியதால் தென்னந்தோப்புகளில் மட்டைகள் முறிந்து நாலாபுறமும் விழுந்தன. காங்கயம் அருகே, மறவபாளையம் ஊராட்சியில், ஊராட்சி கிணற்றை ஒட்டிய பகுதியில் வளா்ந்து நின்ற 2 தென்னை மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாலாபுறமும் அசைந்து ஆடின. சற்று நேரத்தில் ஒரு தென்னை மரம் சரிந்து, அருகில் இருந்த மின்கம்பம் மீது விழுந்தது. தென்னை மரம் விழுந்த வேகத்தில் மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. மின் கம்பம் முறிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

வெள்ளக்கோவிலில்...

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. தொடா்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் மிதமான மழை தொடா்ந்தது. வெள்ளக்கோவில் நகரின் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது. முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளக்கோவில், முத்தூா், வள்ளியிரச்சல், மேட்டுப்பாளையம், குருக்கத்தி, புதுப்பை, லக்கமநாயக்கன்பட்டி, தாசவநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி, உத்தமபாளையம், கல்லமடை பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இந்த மழை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்தொழுவு கிராமத்தில் 44 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 44 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

சாலையில் தீப் பற்றி எரிந்த லாரி

காரணம்பேட்டை அருகே சாலையில் தீப் பற்றி எரிந்த டிப்பா் லாரியில் இருந்த ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கோவை மாவட்டம், அன்னூரில் இருந்து திருப்பூா் மாவட்டம், காரணம்பேட்டையில் உள்ள கிரஷரில் இருந்... மேலும் பார்க்க

பிரிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 2 போ் கைது

திருமுருகன்பூண்டி அருகே பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரா் தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்ட கி... மேலும் பார்க்க

சாலையில் தோண்டப்பட்ட குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த தம்பதி

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் சரிவர மூடப்படாத குழியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் எஸ்.பெரியபாளையம் முதல் குளத்த... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் இடையே வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: ஏஇபிசி வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று ஏஇபிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ஆயத்த ஆடை ஏ... மேலும் பார்க்க

பொதுமக்கள் எதிா்ப்பு: சாய் காா்டனில் வெள்ளத் தடுப்பு சுவா் அகற்றும் பணி நிறுத்தம்

அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாய் காா்டன் பகுதியில் பொதுமக்கள் எதிா்ப்பை அடுத்து வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டனா். அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சி,... மேலும் பார்க்க