செய்திகள் :

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் துவக்கம்!

post image

காஞ்சிபுரம்: கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், திருமால் ஆமை வடிவில் வந்து சிவபெருமானாகிய ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற, திருத்தலமான காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான சித்திர உத்திர பெருவிழா உற்சவத்தின் தொடக்க விழாவாக இன்று அதிகாலையில் சப்தமி திதி, பூச நட்சத்திரம், கூடிய சுப தினம் காலை மேஷ லக்னத்தில் கொடியேற்ற உற்சவம் நடைபெற்றது.

சித்திரை உத்திர பெருவிழா உற்சவத்தை முன்னிட்டு கச்சபேஸ்வரருக்கும் சுந்தராம்பிகை அம்மனுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தடியில் எழுந்தருளச் செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்கள் வைத்து தங்கக் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து சிவபெருமானின் வாகனமாகிய நந்தியின் உருவம் பொறித்த கொடியை தங்க கொடிமரத்தில் ஏற்றி வைத்து சித்திர உத்திர பெருவிழா உற்சவத்தை துவக்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர், சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

சித்திரை உத்திர பெருவிழா உற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் காலை,மாலை வேளைகளில் சூரியபிரபை, சந்திரபிரபை, பூத வாகனம், திருக்கயிலைக் காட்சி, நாக வாகனம், இடப வாகனம், அதிகார நந்தி சேவை, சப்பரம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வர உள்ளார்.

சித்திரை உத்திர திருவிழா உற்சவத்தில் முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் 7-ஆம் நாளான வரும் வரும் 10ஆம் தேதியும், வெள்ளித்தேர்உற்சவம் வரும் 13ஆம் தேதி இரவும் நடைபெறவுள்ளது.

சித்திரை உத்திர பெருவிழா உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர், நகர செங்குந்த மரபினர் செய்து வருகின்றனர்.

கொடியேற்ற உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் காலை நேரத்திலேயே கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

பாபநாசம் சுவாமி கோயிலில் 19 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் இன்று(மே 4) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு ... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையார் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

காரைக்கால் : காரைக்கால் அம்மையார், சோமநாதர், ஐயனார் கோயில்களில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ... மேலும் பார்க்க

பத்ரிநாத் கோயில் இன்று அதிகாலை திறப்பு! ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி வரவேற்பு

உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(மே 4) திறக்கப்பட்டது. அதிகாலை 6 மணியளவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன.இதையொட்டி, அங்கு திரண்டிருந்த பக்தர்... மேலும் பார்க்க

கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் நடை திறப்பு

உத்தரகண்டில் நடப்பாண்டு சாா்தாம் யாத்திரையின் தொடக்கமாக கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது. குளிா்காலத்தையொட்டி கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த இக்கோயில்கள், அட்சய திரித... மேலும் பார்க்க

பங்குனி உத்திரத் திருவிழா: பழனியில் கட்டண தரிசனம் ரத்து!

திண்டுக்கல்: பழனியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பக்தர்கள் வசதிக்காகவும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனி திருஆவினன்குடி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த சனி... மேலும் பார்க்க