செய்திகள் :

காட்பாடி - திருப்பதி இரவு நேர மெமு ரயில் இன்று ரத்து!

post image

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் இரவு நேர மெமு ரயில் திங்கள்கிழமை (ஜூன் 16), ஜூன் 18 ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படவுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: காட்பாடி ரயில்வே யாா்டில் திங்கள்கிழமை (ஜூன் 16), ஜூன் 18-ஆம் தேதி இரவு 9 முதல் நள்ளிரவு 12.30 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், அந்த நாள்களில் திருப்பதியிலிருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரயிலும், மறுமாா்க்கமாக காட்பாடியிலிருந்து இரவு 9.10 மணிக்கு திருப்பதி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளது.

மேலும், கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும். அதேபோல் ஜூன் 17, 19 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு தாம்பரம் செல்லும் மெமு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகுதி ரத்து: இதற்கிடையே, ஜூன் 16, 18 ஆகிய தேதிகளில் அரக்கோணத்தில் இருந்து இரவு 9 மணிக்கு காட்பாடி செல்லும் ரயில் சேவூருடன் நிறுத்தப்படும்.

அதேபோல், விழுப்புரத்திலிருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடி செல்லும் ரயில் வேலூருடன் நிறுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. • வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.• தெற்கு குஜராத் மற்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, குமரி உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (திங்கள்கிழமை) அடுத்... மேலும் பார்க்க

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்த ரௌடி செல்வராஜ் என்ற வரிச்சியூர் செல்வம். இவரது... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவை: தொடக்கி வைத்தார் முதல்வர்

தஞ்சை: தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சையில் இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடவிருக்கும் மினி பேர... மேலும் பார்க்க

நெல்லை சு. முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முன்னாள் விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து, திருவனந்தபுரத்தில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இ... மேலும் பார்க்க