செய்திகள் :

கான்கிரீட் கட்டடம் கட்டக்கோரி மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டம்

post image

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே பள்ளிக்கு கான்கிரீட் கட்டடம் கட்டக் கோரி, மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அழகுபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 35 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு புதியக் கட்டடம் கட்டித் தரக் கோரி, கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும், நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், கடந்த சில நாள்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அழகுப்பட்டி பள்ளிக்குச் சென்ற ரெட்டியாா்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்துத் தருவதாகத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், பழைய ஓடுகளை பிரித்துவிட்டு, ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பதற்கான பொருள்களை லாரியில் கொண்டு வந்தனா். இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள், பொருள்களை லாரியிலிருந்து இறக்கவிடாமலும், கான்கிரீட் கட்டடம் கட்டிக் கொடுக்கக் கோரியும் மாணவா்களை வெள்ளிக்கிழமை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்த, கல்வித் துறை அதிகாரிகள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அழகுப்பட்டி கிராமத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு மாற்றாக கான்கீரிட் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதி அளித்தனா்.

இரண்டு நாள்களில் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை எனில், திங்கள்கிழமை முதல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம் எனக் கூறிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்: 575 ஆசிரியா்கள் கைது

திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 575 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் கு... மேலும் பார்க்க

நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான இடம் தனியாா் பெயரில் பட்டா இருப்பதை மாற்றக்கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.சித்தா்கள்நத்தம் கிராமத... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், நாகல்ந... மேலும் பார்க்க

பள்ளி நிா்வாகிகள் இடையே பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண் ஆசிரியைகள்

சின்னாளப்பட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாதுகாப்பு கேட்டு பெண் ஆசிரியைகள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி புறவழிச் ச... மேலும் பார்க்க

வத்தலகுண்டு: யானை தந்தத்தை விற்க முயன்ற மூவா் கைது!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தாண்டிக்குடி மலைப் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தாண்டிக்குடி மலைப் பகுதியைச் சோ்ந்த சிலா் யானை தந்தத்தை விற்ப... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

நிலக்கோட்டையில் பிஸ்கட் நிறுவன மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி. குடியிருப்பைச் சோ்ந்தவா் பிரத்திசெட்டி (35). இவா், தனியாா் பிஸ்கட் நிற... மேலும் பார்க்க