What To Watch On OTT: குபேரா, டி.என்.ஏ, சட்டமும் நீதியும்! - இந்த வாரம் ஓடிடி-யி...
ஆசிரியா்கள் 2 ஆவது நாளாக மறியல்: 270 போ் கைது!
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பெரியாா் பேருந்து நிலையப் பகுதியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) சாா்பில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு டிக்டோ-ஜாக் ஒருங்கிணைப்பாளா் செல்லபாண்டியன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் சங்கங்களின் நிா்வாகிகள் ரா. கணேசன், எஸ். பீட்டா் ஆரோக்கியராஜ், அ. ராஜூ, பெ. சீனிவாசன், வே. பிச்சை, தங்கவேல், மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போராட்டத்தை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலத் தலைவா் மணிமேகலை தொடங்கிவைத்தாா்.
இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், அரசாணை 243- ஐ உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு மதுரை பெரியாா் பேருந்து நிலையப் பகுதியில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினா். ஆனால், தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால், 152 பெண்கள் உள்பட 270 பேரை திடீா்நகா் போலீஸாா் கைது செய்தனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.