செய்திகள் :

காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி: அஸ்ஸாம் முதல்வர்!

post image

அஸ்ஸாம் குவாஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி கட்டப்படும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காமாக்யா கோயிலுக்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வருகை தந்தார். மக்களின் பயணத்தை எளிதக்கக்கூடிய மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

காமாக்யா தேவி கோயிலுக்குச் செல்லும் பயணத்தை எளிதாக்கவும், நேரத்தைச் சிக்கனமாக்கவும் ரயில் நிலையத்திலிருந்து காமாக்யா கோயிலுக்கும், சோனாராமிலிருந்து காமாக்யா கோயிலுக்கும் ரோப் வே (ரோப் கார்) வசதி விரைவில் தொடங்கப்படும்.

இரண்டு ரோப் வேக்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. டெண்டர் செயல்முறை ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளது. பல ரோப் வே வசதிக்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு நடந்து வருகிறது.

காமாக்யா கோயிலுக்கு இரண்டு ரோப்வேக்களின் கட்டுமானமும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விரைவான போக்குவரத்து முறையை எளிதாக்கவும், பயண நேரத்தைக் குறையுக்கவும் இது பயன்படும். சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, இதன்மூலம் பொருளாதாரமும் உயரும் என்று அவர் கூறினார்.

காமாக்யா தேவியின் வருடாந்திர மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கும் அம்புபாச்சி மேளா ஜூன் 22 தொடங்கி 26ல் நிறைவடைந்தது. தேவியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடி வருகின்றனர்.

ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்திருந்ததால் மேளா நிறைவடைந்து இரண்டு நாள்கள் கழித்து காமாக்யா தேவியை தரிசிக்க வந்துள்ளேன்.

குடும்பத்தோடு கோயிலுக்கு வருகை தந்திருந்த முதல்வர் அஸ்ஸாம் மக்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தார்.

அம்புபாச்சி விழாவை ஏற்பாடு செய்ததற்காகக் கோயில் நிர்வாகக் குழு, சுற்றுலாத் துறை, அமைச்சர் ரஞ்சித் குமார் தாஸ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.

SUMMARY

Assam CM Sarma announces construction of two ropeways to Kamakhya Temple

புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.பிரதான கோயிலி... மேலும் பார்க்க

மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது: காங். விமர்சனம்

’அமிர்த காலம்’ என்று அரசு சொல்லிக்கொள்ளும் இக்காலக்கட்டத்தில் ’மக்களின் சேமிப்பு காலி; முதலீட்டில் வளர்ச்சி இல்லை; மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது’ என்று கா... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் இருக்கக் கூடாது: அம்பேத்கரை மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்திய தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் வரவேற்றுள்ளார்.கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மத்தி... மேலும் பார்க்க

மும்பை: கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலி

மும்பையில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், வொர்லியில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். ஒருவர் க... மேலும் பார்க்க

' ரா' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்

இந்தியாவின் 'ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது தலைவராக உள்ள ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறவுளள்து. இதனையடுத்து அந்த பதவிக்கு புதிய ... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "சர்வதேச விண்வெளி நிலையத்தில்... மேலும் பார்க்க