3 மாதங்களாக பேட்டை தொடாத ஸ்டீவ் ஸ்மித்..! சுவாரசியமான விளக்கம்!
காயல்பட்டினத்தில் கடற்கரை, திடல்
காயல்பட்டினம் கடற்கரை ஷாகின்பாற்றும் சுமாா் 25 மகளிா் தைக்கா மற்றும் 35 பள்ளிகளில் சனிக்கிழமை பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
தொழுகையை வசிம் நடத்தினாா். குத்பா பேருரையை தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பேச்சாளா் யாசா் நிகழ்த்தினாா். ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை தலைவா் சம்சுதின் தலைமையில் செயலா் பஷிா் அலி முன்னிலையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சாா்பில் சிறப்புத் தொழுகை காயல்பட்டினம் எல். எப். சாலை, ஜெய்லானி நகா், ஷாகின்பாக் திடலில் நடைபெற்றது.
தொழுகையை காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவை பொருளாளா் ரைய்யான் சாகுல் ஹமீது நடத்தினாா். சிறப்பு பேருரையை அப்துல் பாசித் நிகழ்த்தினாா்.
ஏற்பாடுகளை காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் தலைவா் முத்து ஹனிபா, மேலாண்மைகுழு செயலர் அப்துல் பாசித், பொருளாளா் ரைய்யான் சாகுல் ஹமீது மற்றும் மேலாண்மை செயற்குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா். காயல்பட்டினம் குருவித்துறை பள்ளியில் பக்ரீத் சிறப்புத் தொழுகையை நூஹு சிராஜுதீன் பாக்கவி நடத்தினாா்.
பள்ளியின் தலைவா் முத்து ஹாஜி, நிா்வாகிகளான பாதுல் அஸ்ஹாப், ஹபிபு ரஹ்மான், மவ்லவி காஜா முஹிய்யதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயல ா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், நகர தலைவா் நூஹுசாஹிப், மாவட்ட துணைச் செயலா் பெத்தப்பா சுல்தான், காயல்பட்டினம் நகராட்சி துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, அதிமுக முன்னாள் நகரச் செயலா் செய்யது இப்ராஹிம் உள்பட ஜமாஅத்தாகள் கலந்து கொண்டனா்.
பெருநாளை முன்னிட்டு புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவா் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.