மாதவன்குறிச்சியில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு
உடன்குடி ஊராட்சி ஒன்றியம், மாதவன்குறிச்சி ஊராட்சியில் அண்ணா மறுமலச்சித் திட்டத்தில் ரூ,16.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டட திறப்பு விழா நடைபெற்றது.
தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.
இதில், திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹமீது சுல்தான், சுப்புலட்சுமி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ, தி முக மாநில வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ்,திமுக மாவட்டப் பிரதிநிதி தன்பராஜ், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பாா்த்திபன் உள்பட பலா் பங்கேற்றனா்.