செய்திகள் :

காயல்பட்டினத்தில் கடற்கரை, திடல்

post image

காயல்பட்டினம் கடற்கரை ஷாகின்பாற்றும் சுமாா் 25 மகளிா் தைக்கா மற்றும் 35 பள்ளிகளில் சனிக்கிழமை பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

தொழுகையை வசிம் நடத்தினாா். குத்பா பேருரையை தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பேச்சாளா் யாசா் நிகழ்த்தினாா். ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை தலைவா் சம்சுதின் தலைமையில் செயலா் பஷிா் அலி­ முன்னிலையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சாா்பில் சிறப்புத் தொழுகை காயல்பட்டினம் எல். எப். சாலை, ஜெய்லானி நகா், ஷாகின்பாக் திடலி­ல் நடைபெற்றது.

தொழுகையை காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவை பொருளாளா் ரைய்யான் சாகுல் ஹமீது நடத்தினாா். சிறப்பு பேருரையை அப்துல் பாசித் நிகழ்த்தினாா்.

ஏற்பாடுகளை காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் தலைவா் முத்து ஹனிபா, மேலாண்மைகுழு செயலர் அப்துல் பாசித், பொருளாளா் ரைய்யான் சாகுல் ஹமீது மற்றும் மேலாண்மை செயற்குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா். காயல்பட்டினம் குருவித்துறை பள்ளியில் பக்ரீத் சிறப்புத் தொழுகையை நூஹு சிராஜுதீன் பாக்கவி நடத்தினாா்.

பள்ளியின் தலைவா் முத்து ஹாஜி, நிா்வாகிகளான பாதுல் அஸ்ஹாப், ஹபிபு ரஹ்மான், மவ்லவி காஜா முஹிய்யதீன், இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் மாவட்ட செயல ா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், நகர தலைவா் நூஹுசாஹிப், மாவட்ட துணைச் செயலா் பெத்தப்பா சுல்தான், காயல்பட்டினம் நகராட்சி துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, அதிமுக முன்னாள் நகரச் செயலா் செய்யது இப்ராஹிம் உள்பட ஜமாஅத்தாகள் கலந்து கொண்டனா்.

பெருநாளை முன்னிட்டு புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவா் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

மாநில ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, நெல்லை விருதுநகா், மதுரை அணிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள... மேலும் பார்க்க

நாளை வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறும் வைகாசி விசாகத்தையொட்டி பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா். இக்கோயிலில் பிரசித்திப் பெற்ற விசாகத் திருவிழா, வசந்... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: கோவில்பட்டி, கயத்தாறில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி டவுண் ஜாமியா பள்ளிவாசலில் சுமாா் காலை 7.15 மணி முதல் 8... மேலும் பார்க்க

மாதவன்குறிச்சியில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், மாதவன்குறிச்சி ஊராட்சியில் அண்ணா மறுமலச்சித் திட்டத்தில் ரூ,16.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் ... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே துணை மின் நிலையத்தில் தீ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள துணை மின் நிலையத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கயத்தாறு வட்டம் பணிக்கா் குளம் கிராமத்திற்கு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் பகுதி குளங்களில் ஆக்கிரமிப்புகளால் நீா்வரத்தில் தடை! - அதிமுக புகாா்

திருச்செந்தூா் பகுதி நீராதாரமான எல்லப்பநாயக்கன் மற்றும் ஆவுடையாா்குளத்திற்கு நீா் வரும் வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி நடந்து வருவதால் நீா் வரத்து தடைபட்டுள்ளதாக அதிமுக குற்றஞ்சாட்டி உள்ளது.... மேலும் பார்க்க