Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
பக்ரீத் பண்டிகை: கோவில்பட்டி, கயத்தாறில் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி டவுண் ஜாமியா பள்ளிவாசலில் சுமாா் காலை 7.15 மணி முதல் 8.15 மணி வரை இமாம் முகமது ஜமீல் சிறப்புத் தொழுகையை நடத்தினாா். இதில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பள்ளிவாசல் தலைவா் யூசுப் செரிப் என்ற ஹீமாயின், செயலா் நிஜாமுதீன், பொருளாளா் நசீா் அகமது ஆகியோா் செய்திருந்தனா். தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.
இதேபோல, கோவில்பட்டி லாயல் மில் காலனி ஆயிஷா பள்ளிவாசல், தென்றல் நகா் ஜமாத் பள்ளிவாசல், புதுகிராமம் முகமதுசாலியாபுரத்தில் உள்ள பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கயத்தாறு: கயத்தாறில் இரு பள்ளிவாசலிலும், அய்யனாா்ஊத்து மற்றும் மானங்காத்தான் ஆகிய இடங்களில் தலா ஒரு பள்ளிவாசலிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.
கழுகுமலையில் உள்ள முகமது நயினாா் ஜும்மா பள்ளிவாசல், துலுக்கா்பட்டியில் உள்ள முகமது நயினாா் ஜும்மா பள்ளிவாசலிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.