செய்திகள் :

காய்ச்சல் இல்லை; ரத்தத்தில் சீரான ஆக்சிஜன்: போப் உடல் நிலை குறித்து வாடிகன்!

post image

போப் பிரான்சிஸுக்கு காய்ச்சல் இல்லை என்றும் அவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வாடிகன் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவருவதால், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகவும் வாடிகன் குறிப்பிட்டுள்ளது.

நான்காவது ஞாயிற்றுக்கிழமையாக அவர் இல்லாமல் புனித ஆண்டுப் பணிகளை வாடிகன் கத்தோலிக்க திருச்சபை மேற்கொண்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), சுவாசக் கோளாறு காரணமாக பிப். 14ஆம் தேதி ரோம் நகரிலுள்ள ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 4 வாரங்களாக மருத்துவமனையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 3ஆம் தேதி போப் பிரான்சிஸுக்கு உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டு அதன் உதவியுடன் சுவாசித்ததாக வாடிகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே நான்காவது வாரமாகத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவரும் போப் பிரான்சிஸ் குறித்து வாடிகன் நல்ல தகவல்களை வெளியிட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; தற்போது சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும், காய்ச்சல் நீங்கி அவரின் ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு சீராக உள்ளதாகவும் வாடிகன் குறிப்பிட்டுள்ளது.

வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆசிர்வாதக் கூட்டத்தில், போப் பிரான்சிஸுக்கு பதிலாக அவரின் நெருங்கிய நண்பரான கனடாவைச் சேர்ந்த கார்டினல் மைக்கேல் ஸெர்னி ஆசிர்வாதக் கூட்டங்களை நடத்தி வருகிறார். வாடிகன் திருச்சபையின் அன்றாட திருப்பணிகளும் போப் இல்லாமல் நடைபெற்று வருவதாக வாடிகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அமெரிக்கா: ஹிந்து கோயிலில் தாக்குதல்

கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார்.கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கனடாவில் லிபரல் கட்சியின் அடுத்த ... மேலும் பார்க்க

சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 போ் பலி!

சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபா் பஷாா் அல்-அஸாதின் ஆதரவாளா்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழ... மேலும் பார்க்க

சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்!

சிங்கப்பூரின் புதிய குடிமக்கள் அந்நாட்டை வளமாக்கி, பொருளாதாரத்துக்கு ஊக்கமளிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், மூத்த அமைச்சருமான லீ சியென் லூங் பெருமிதம் தெரிவித்தாா். புதிதாக சிங்கப்பூா் குடியுரி... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபா் சுட்டுப் பிடிப்பு

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சோ்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினா் (சீக்ரெட் சா்வீஸ்) சுட்டுப் பிடித்தனா். இந்தத் துப்பாக்கிச்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு! -இந்தியா கடும் கண்டனம்

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள பிரபலமான ஹிந்து கோயிலின் மதில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை சமூக விரோதிகள் எழுதியுள்ளனா். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு ஹிந்து கோயில்... மேலும் பார்க்க

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி: அதிகரிக்கும் கோரிக்கைகள்

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது. நேபாளத்தில் நடைபெற்ற போராட்டங்களைத் தொடா்ந்து கடந்த 2008-ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலா்ந்தத... மேலும் பார்க்க