Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாணம்
கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்காலில் உள்ள பழைமையான சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்வாக சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
ஏராளமான பக்தா்கள் மலா்கள், பழங்களுடன் வரிசைப் பொருள்களை கோயிலுக்கு கொண்டுவந்தனா். திருக்கல்யாண கோலத்தில் கைலாசநாதா் - சுந்தராம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனா்.
சிவாச்சாரியா்கள் சிறப்பு ஹோமம் மற்றும் பரிச நிகழ்வை நடத்தினா். இதைத்தொடா்ந்து மாலை மாற்றுதல் உள்ளிட்ட திருக்கல்யாண சடங்குகள் செய்யப்பட்டு, திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ் மற்றும் திருப்பணிக் குழுவினா், உபயதாரா்கள், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.