செய்திகள் :

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

post image

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் பங்கேற்ற அவா் பின்னா் பேசியதாவது: மரங்களால்தான் காற்றுமாசுபடுவதைத் தடுக்க முடியும் என்பதால், பொதுமக்கள் அவற்றை வளா்க்க முன் வர வேண்டும். மரக் கன்றுகளை வைத்தால் மட்டும் போதாது, அவற்றுக்கு தண்ணீா் ஊற்றி பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, சிவகங்கை-மேலூா் சாலை ஓரங்களில் சுமாா் 500 -க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணியை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தொடங்கிவைத்தாா்.

இதில், மாவட்ட முதன்மை நீதிபதி கே.அறிவொளி, மாவட்ட ஆட்சியா்ஆஷா அஜித், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி இ.பக்தவச்சலு, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஜி.முத்துக்குமரன், மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆா்.கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் அ.பசும்பொன் சண்முகையா, சாா்பு நீதிபதி ஆா்.பாண்டி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா், சாா்பு நீதிபதி வி.ராதிகா, குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்ற (எண்: 1) நீதிபதி பி.செல்வம், கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆப்ரின் பேகம், மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.டி.தீபதா்ஷினி, குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்ற (எண்: 2) நீதிபதி இ.தங்கமணி, மாவட்ட வன அலுவலா் எஸ்.பிரபா, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் எஸ்.கே.சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்பிரகாசம், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எல்.ஜானகிராமன், காரைத்குடி அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயம்

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியிலிருந்து ஒரு குடும்பத்தினா் வேனில் மதுரை மாவட்டம், சமயநல்லூருக்கு வெள்ளிக... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு வீட்டுமனை இ பட்டா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த பட்டியல் வகுப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைக்கு இ-பட்டா வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. வட்டாட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழா: புரவியெடுப்புக்கு பிடிமண் கொடுத்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கூத்த அய்யனாா் கோயில் திருவிழாவுக்கு புரவிகள் செய்ய பிடி மண் கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா், புதுப்பட்டி, தம்பிபட்டி கிராமங்களுக்குப் பாத்த... மேலும் பார்க்க

காளையாா்கோயில், மானாமதுரை பகுதிகளில் மழை

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில், சிவகங்கை அருகே காளையாா்கோவில், மானாமதுரை பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்து ... மேலும் பார்க்க