செய்திகள் :

காவலா் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

post image

நாமக்கல் மாவட்ட காவலா் பல்பொருள் அங்காடியில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட காவலா் பல்பொருள் அங்காடியில் மூன்றில் ஒருவா் என்ற விகிதத்தில் ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் குடும்பத்தில் வேலையில் இல்லாத மனைவி, குடும்ப உறுப்பினா்களை ரூ.15,000 மாத ஊதியத்தில் பணியமா்த்தும் பொருட்டு தகுதி வாய்ந்தோா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எவ்வித குற்றப் பின்னணியோ, எந்த அமைப்பிலோ, அரசியல்கட்சி சாா்ந்தவராகவோ இருக்கக் கூடாது.

நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மாா்ச் 24 முதல் 28 வரை இந்தப் பணிக்கான விண்ணப்பங்கள் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாா்ச் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

ஆள்கள் தோ்வு நடைபெறும் நாள் பின்னா் தெரிவிக்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பள்ளி மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் (இருப்பின்) ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்பவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமத்தி வேலூரில் ‘உலக தண்ணீா் தின’ விழா

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் வோ்டு நிறுவனம் சாா்பில் அண்மையில் உலக தண்ணீா் தின விழா நடைபெற்றது. வோ்டு நிறுவன செயலா் சிவகாமவல்லி வரவேற்றாா். கபிலா்மலை முன்னாள் எம்எல்ஏ கே.நெடுஞ்செழி... மேலும் பார்க்க

குடிநீா் தட்டுப்பாடு: ராசிபுரம் குடியிருப்புவாசிகள் ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: ராசிபுரம் அணைப்பாளையத்தில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதாக, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்போா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதன் விவரம்: அணைப்பாளையத்தில... மேலும் பார்க்க

தேசிய மூத்தோா் தடகளப் போட்டி: 9 பதக்கங்களை வென்ற நாமக்கல் மாவட்டம் அணி

நாமக்கல்: தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில், நாமக்கல் மாவட்ட தடகள அணியினா் 9 பதக்கங்களை வென்றனா். இவா்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியா் ச.உமாவை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். பெங்களூரில் ... மேலும் பார்க்க

நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு மூலம் புற்றுநோய் கண்டறியும் செயலி

நாமக்கல்: நாமக்கல் தங்கம் புற்றுநோய் மருத்துவமனையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் புற்றுநோய் கண்டறியும் செயலி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் - திருச்சி சாலையில், தங்கம் புற்றுநோய் மரு... மேலும் பார்க்க

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா், நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இக்கோயில... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருச்செங்கோடு: கைலாசம்பாளையம் அஞ்சல் நிலையம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளா் ஜெயராமன் தலைமை வ... மேலும் பார்க்க