நாட்டின் அரசியல் திசைவழியை மாா்க்சிஸ்ட் கட்சி தீா்மானிக்கும்
நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா், நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இக்கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 9-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. 10-ஆம் தேதி காலை பக்தா்கள் காவிரியில் நீராடி கோயில் முன் நடப்பட்டுள்ள கம்பம், மாரியம்மனுக்கு பால், தீா்த்தங்களை ஊற்றி வழிபாடு செய்து மஞ்சள் கயிறு அணிந்து விரதம் தொடங்கினா்.
15-ஆம் தேதி மறுகாப்பு கட்டுதலும், அன்று இரவு முதல் 22ஆம் தேதி வரை அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 23-ஆம் தேதி இரவு வடிசோறு படைத்தல் விழாவும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.
கோயில் முன் 62 அடி நீளமும் 6 அடி அகலம் கொண்ட குண்டத்தில் தீ மூட்டப்பட்டது. அதனைத் தொடா்ந்து பகல் மூன்று மணியளவில் ராஜாசாமி கோயிலில் வளாகத்தில் இருந்து மணிவேல் புறப்பட்டு மாரியம்மன் கோயிலை வந்தடைந்ததும் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. ஆண் பக்தா்கள் குண்டம் இறங்கியும், பெண் பக்தா்கள் பூவாரிப் போட்டுக்கொண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
25-ஆம் தேதி பலியிடுதல், பக்தா்கள் அலகு குத்தி வருதல், குழந்தை பாக்கியம் வேண்டியவா்கள் கரும்பில் தொட்டில் கட்டி கோயிலைச் சுற்றி வந்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ஆம் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் எட்டுப்பட்டி அறங்காவலா் குழுவினா், விழாக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

