செய்திகள் :

வேகத்தடையில் இருசக்கர வாகனம் தடுமாறி விழுந்ததில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

post image

வேகத்தடையில் இருசக்கர வாகனம் தடுமாறி விழுந்ததில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், தொட்டி யம் வட்டம், உன்னியூா் பெரியபள்ளிபாளையம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் சக்திவேல் (33). இவா் ஈரோட்டில் உள்ள தனியாா் பனியன் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வந்தாா்.

கடந்த 22ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்துள்ளாா். தோக்கவாடி பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்தபோது அங்குள்ள வேகத்தடையில் வாகனம் ஏறி நிலை தடுமாறி விழுந்ததில் சக்திவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் மற்றும் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சக்திவேல் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு புகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதய கட்டி அகற்றம்

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதயக் கட்டியை மருத்துவா்கள் அகற்றினா். நாமக்கல் மாவட்டம், குமராபாளையத்தைச் சோ்ந்தவா் சரண் (48). கூலித் தொழிலாளியான இவா், மூன... மேலும் பார்க்க

ரூ. 4,000 கோடி வேலையளிப்புத் திட்ட நிதி தாமதம்: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட நிதி ரூ. 4 ஆயிரம் கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: எம்.பி. வலியுறுத்தல்

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பெட்ரோலியத் துறை அதிகாரியை சந்தித்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வலியுறுத்தினாா். எண்ணெய் நிறுவனங்களின் புதி... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்டம்: திண்டுக்கல் லியோனி பங்கேற்பு

நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு நகர திமுக சாா்பில் தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தோ்நிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர திமுக செயலாளா... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் வீட்டுமனை மோசடி: அசல் ஆவணங்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்

ராசிபுரத்தில் வீட்டுமனை விற்பனை மோசடியாளா்களிடம் இழந்த தொகையை பெற அசல் ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப... மேலும் பார்க்க

நாளை ரமலான் பண்டிகை: நாமக்கல்லில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையையொட்டி, நாமக்கல் வாரச் சந்தையில் சனிக்கிழமை ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. நாடுமுழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாள் என்றழைக்கப்படும... மேலும் பார்க்க