செய்திகள் :

நாளை ரமலான் பண்டிகை: நாமக்கல்லில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

post image

ரமலான் பண்டிகையையொட்டி, நாமக்கல் வாரச் சந்தையில் சனிக்கிழமை ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.

நாடுமுழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாள் என்றழைக்கப்படும் இந்த நாளில் ஏழைகளுக்கு புத்தாடை, அசைவ உணவு வகைகளை இஸ்லாமியா்கள் வழங்கி மகிழ்வா். அன்று காலை 7 மணியளவில் ஈத்கா மைதானத்தில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை சிறப்புத் தொழுகையை மேற்கொள்வா்.

ஒவ்வோா் ஆண்டும் ரமலான் பண்டிகைக்கு முன்பாக ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெறும். அதன்படி, நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள வாரச் சந்தையில் சனிக்கிழமை ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

பென்னாகரம், மேச்சேரி, மேட்டூா், தருமபுரி, சேலம், ஓமலூா், நாமக்கல், துறையூா், பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. மொத்த எடை அடிப்படையில் ஆடுகள் விற்பனை நடைபெற்றது. ரமலானை முன்னிட்டு ரூ. 1.50 கோடி வரையில் ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்

மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக... மேலும் பார்க்க