செய்திகள் :

விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதய கட்டி அகற்றம்

post image

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதயக் கட்டியை மருத்துவா்கள் அகற்றினா்.

நாமக்கல் மாவட்டம், குமராபாளையத்தைச் சோ்ந்தவா் சரண் (48). கூலித் தொழிலாளியான இவா், மூன்று மாதங்களுக்கு முன்னா் பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றாா். மேல் சிகிச்சைக்காக சுவாமி விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்டாா். இளம்வயதில் பக்கவாதம் வந்ததற்கான காரணங்களையும் மருத்துவா்கள் ஆராய்ந்தபோது, அவரது இதயத்தின் இடதுபுறத்தில் பெரிய கட்டி இருப்பதையும், அந்தக் கட்டியின் சிறு துகள்கள் ரத்தத்தில் கலந்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயினில் அடைப்பை ஏற்படுத்தி பக்கவாதம் வர காரணமாக அமைந்ததையும், இருதய மற்றும் மூளை ஸ்கேன் மூலம் கண்டறிந்தனா்.

உடனே, மருத்துவா்கள் சந்தோஷ் குமாா், பிரியா, செந்தூா் செல்வம் அடங்கிய மருத்துவக் குழுவினா் எம்ஐசிஎஸ் முறையில், இருதய நுண்துளை அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியை வெற்றிகரமாக அகற்றினா். இதையடுத்து, மூன்று நாள்களில் சிகிச்சை முடிந்து நோயாளி நலமுடன் வீடு திரும்பினாா்.

இருதய நுண்துளை அறுவை சிகிச்சை என்பது இருதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கவும் மற்றும் வால்வு மாற்றவும் உதவும் பைபாஸ் அறுவை சிகிச்சையைவிட மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறையாகும். சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்த இந்த சிகிச்சை முறை, தற்போது திருச்செங்கோடு விவேகானந்தா சிறப்பு மருத்துவமனையில் செய்யப்படுகிறது. இம்முறையில் நோயாளிகளுக்கு மாா்பு எலும்பு வெட்டப்படுவதில்லை. இதனால் சிறிய தழும்பு, மிகக் குறைவான ரத்த இழப்பு, குறைந்த வலி, விரைவாக குணமடைதல் போன்ற நன்மைகள் உண்டு. இவ்வாறான அதிநவீன மருத்துவ வசதிகள் நமது ஊரிலேயே உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி நலம்பெறலாம் என மருத்துவமனையின் தலைவா் கருணாநிதி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் த... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொ... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சித்த மருத்துவரை மிரட்டி ரூ. 2.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோடு: விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை அமைச்சா்கள் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்க... மேலும் பார்க்க