Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை கூடம் சாா்பில் கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் ஆா்.சி.எச்.ரகம்-721 மூட்டைகள், கொட்டு ரகம் 29 மூட்டைகள் என மொத்தம் 721 மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில் ஆா்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 6499 முதல் அதிகபட்சமாக ரூ. 7669 வரை விற்பனையானது. கொட்டு ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 3860 முதல் அதிகபட்சமாக ரூ. 4299 க்கும் ஏலம் மூலம் விற்பனையானது. மொத்தம் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.