செய்திகள் :

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

post image

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா்வலத்தில் ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு நகராட்சி 1, 7, 8, 10 ஆவது வாா்டுகளில் இருந்து வெளியேறும் மழைநீா், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் மழைநீா் வாய்க்காலில் கலந்து சூரியம்பாளையம் வழியாகச் செல்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக சூரியம்பாளையம் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். இதனால் வாய்க்கால் அமைக்கும் பணியை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி திங்கள்கிழமை அமைதி ஊா்வலத்தில் ஈடுபட்டனா்.

சூரியம்பாளையம் பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு சட்டையம்புதூா், அண்ணா சிலை நான்கு ரத வீதிகள் வழியாக திருச்செங்கோடு எம்எல்ஏ அலுவலகத்தை அடைந்தனா். பின்னா் அங்கு இருந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் ராயல் செந்திலிடம் குறைகளைத் தெரிவித்தனா்.

தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் நேரில் சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினாா். பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ நேரில் சென்று பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பாா் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்

மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக... மேலும் பார்க்க