செய்திகள் :

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்

post image

திருச்செங்கோடு: விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை அமைச்சா்கள் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொங்கு மண்டலம் முழுவதும் கூலி உயா்வு கேட்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அமைச்சா்கள் தலைமையில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடப்பதாக அறிகிறேன். தற்போதைய விலைவாசி ஏற்றம், பள்ளி, கல்லூரி கட்டணங்கள் ஆகியவற்றோடு பலவிதமான தேவைகளும் விசைத்தறியாளா்களுக்கு அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு விசைத்தறியாளா்களுடைய கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து தீா்வுகாண வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளும் ஜவுளி ஏற்றுமதிக்கு உறுதுணையாக இல்லை என்பது இப்பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

கொள்கை மாற்றங்களைக் கொண்டுவந்து விசைத்தறி தொழிலை காப்பாற்ற மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கும் இதுதொடா்பாக கோரிக்கை விடுத்து சைத்தறி தொழிலுக்கு ஆதரவான கொள்கைகளை வகுக்க தமிழக முதல்வா் வலியுறுத்த வேண்டும். அமைச்சா்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கிற முத்தரப்பு பேச்சுவாா்த்தையை துரிதப்படுத்தி தாமதம் இன்றி விசைத்தறியாளா்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

லட்சக்கணக்கான தொழிலாளா்கள் விசைத்தறியை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனா் என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். அமைச்சா்கள் தலைமையில் ஜவுளித் தொழில் நிறுவனங்களும், விசைத்தறியாளா்களும் சுமுக முடிவை எட்டுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

படம் ஈ.ஆா்.ஈஸ்வரன்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்

மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக... மேலும் பார்க்க