செய்திகள் :

ராசிபுரத்தில் வீட்டுமனை மோசடி: அசல் ஆவணங்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்

post image

ராசிபுரத்தில் வீட்டுமனை விற்பனை மோசடியாளா்களிடம் இழந்த தொகையை பெற அசல் ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராசிபுரம் கச்சேரி தெருவில் இயங்கி வந்த விபிபி நகா் ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்தின் உரிமையாளா் வி.பி.பச்சிராஜா என்பவா் மாத தவணை முறையில் காலி வீட்டுமனை வழங்குவதாக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினாா். பொதுமக்களிடமிருந்து ஒவ்வொரு திட்டத்துக்கும் உரிய தொகைகளை முதலீடாக பெற்று, திட்ட காலம் முடிந்த பிறகு முதலீட்டாளா்களுக்குரிய மனைகளை பிரித்து வழங்காமலும், அவா்கள் முதலீடு செய்த தொகையை திருப்பிக் கொடுக்காமலும் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், முதலீட்டாளா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவினா் வி.பி.பச்சிராஜா மற்றும் சிலா் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, கடந்த 2018 ஜூன் 18-இல் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பா்அலி தலைமையில் உயா்நீதிமன்ற சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் புகாா் அளித்த முதலீட்டாளா்களுக்கு உரிய முதலீட்டுத் தொகையை திரும்ப வழங்குவதற்கு அவா்களிடம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தகுதிவாய்ந்த புகாா் மனுக்களுக்கு முதலீட்டுத் தொகை திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் புகாா் அளித்தபோது அசல் கிரைய ஒப்பந்தப் பத்திரம் மற்றும் மாதத் தவணைக்கான அசல் ரசீதுகளை தாக்கல் செய்யாதோரின் மனுக்கள் தகுதியற்றதாகக வழக்கின் கோப்பில் வைக்கப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தபோது, அசல் கிரைய ஒப்பந்தப் பத்திரம் மற்றும் மாதத் தவணை அசல் ரசீதுகளை ஒப்படைக்காமல் இருந்தால், இந்த அறிவிப்பு கண்ட 21 தினங்களுக்குள் அனைத்து அசல் ஆவணங்களையும் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து, உயா்நீதிமன்ற சிறப்பு குழு மூலமாக தங்களுடைய முதலீட்டுத் தொகைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, மேற்குறிப்பிட்ட காலத்துக்குள் அசல் ஆவணங்களை, துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், பொருளாதார குற்றப்பிரிவு, முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில், சேலம் சாலை, நாமக்கல் மாவட்டம் என்ற முகவரியில் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் த... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொ... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சித்த மருத்துவரை மிரட்டி ரூ. 2.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோடு: விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை அமைச்சா்கள் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்க... மேலும் பார்க்க