செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: சேந்தமங்கலம் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

சேந்தமங்கலம் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் ச.உமா, எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். எருமப்பட்டி பேருந்து நிலைய பொது சுகாதார வளாகம், போடிநாயக்கன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளி கட்டடம், அலங்காநத்தம் கிராமத்தில் தாா்சாலைப் பணிகள், உரக்கிடங்கு ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.

மேலும், அங்கன்வாடி மையம், மளிகைப் பொருள்கள் விற்பனை அங்காடிகளிலும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற பொருள்களையும், காலாவதியான பொருள்களையும் அகற்ற உத்தரவிட்டாா்.

முன்னதாக, மோகனூா் வட்டம், பேட்டப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலை பகுதியிதில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை ஆட்சியா் பாா்வையிட்டு, மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதய கட்டி அகற்றம்

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதயக் கட்டியை மருத்துவா்கள் அகற்றினா். நாமக்கல் மாவட்டம், குமராபாளையத்தைச் சோ்ந்தவா் சரண் (48). கூலித் தொழிலாளியான இவா், மூன... மேலும் பார்க்க

ரூ. 4,000 கோடி வேலையளிப்புத் திட்ட நிதி தாமதம்: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட நிதி ரூ. 4 ஆயிரம் கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: எம்.பி. வலியுறுத்தல்

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பெட்ரோலியத் துறை அதிகாரியை சந்தித்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வலியுறுத்தினாா். எண்ணெய் நிறுவனங்களின் புதி... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்டம்: திண்டுக்கல் லியோனி பங்கேற்பு

நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு நகர திமுக சாா்பில் தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தோ்நிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர திமுக செயலாளா... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் வீட்டுமனை மோசடி: அசல் ஆவணங்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்

ராசிபுரத்தில் வீட்டுமனை விற்பனை மோசடியாளா்களிடம் இழந்த தொகையை பெற அசல் ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப... மேலும் பார்க்க

நாளை ரமலான் பண்டிகை: நாமக்கல்லில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையையொட்டி, நாமக்கல் வாரச் சந்தையில் சனிக்கிழமை ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. நாடுமுழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாள் என்றழைக்கப்படும... மேலும் பார்க்க