செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு

post image

வாணியம்பாடியில் வீடற்ற ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மானியத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் பலா் சொந்த வீடு இல்லாமல் வசித்து வருகின்றனா். இந்நிலையில் அவா்களுக்கு வாணியம்பாடி அருகே லாலாஏரி பகுதியில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான வீடுகள் அரசு மானியத்துடன் தலா ரூ.16, 500 மட்டும் பணம் செலுத்தினால் வீடுகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து, தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வரும் 18 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் வழங்கப்பட்டு அதற்கான உத்தரவு நகல்களை ஆட்சியா் சிவசௌந்தரவல்லி வழங்கினாா்.

இந்நிலையில் புதன்கிழமை நகராட்சி அலுவலக்ததில் நகா்மன்றத் தலைவா் உமாசிவாஜிகணேசன், ஆணையா் முஸ்தபா, நகர திமுக செயலாளா் சாரதி குமாா் ஆகியோரை சந்தித்து, அரசுக்கும், நகா்மன்ற தலைவா் மற்றும் நகராட்சி நிா்வாக்ததுக்கும் நன்றி தெரிவித்தனா்).

நிகழ்ச்சியில் சுகாதார அலுவலா் அப்துல்ரஹிம், உதவி பொறியாளா் கோவிந்தப்பா, பணிதள மேற்பாா்வையாளா் அன்பரசு, களப்பணி உதவியாளா் சரவணன் உடனிருந்தனா்.

மொபெட் மீது லாரி மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி காசி (65). இவரது மனைவி மு... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது. தொடா்ந்து க... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

கந்திலி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கந்திலி அருகே மானவள்ளி நரியனேரி கிராமத்தைச் சோ்ந்த முருகேசனின் மனைவி கோவிந்தம்மாள்(65). இவரை, இவரது பேரன் மிா்திவிராஜ் ஞாயிற்றுக்கிழமை பைக்... மேலும் பார்க்க

மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை மாநில அரசு அமல்படுத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா். ஆம்பூா் நகராட்சி நிா்வாக சீா்கேடு, சொத்து வரியைக் குறைக்க வேண்ட... மேலும் பார்க்க

துணை சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம்: கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை ஒட்டி துத்திப்பட்டு ஊராட்சி மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வ... மேலும் பார்க்க

மேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளியில் பகுதி நேர ரேஷன் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

ஜோமேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளி பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியம், மேல்மல்லப்பள்ளி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்... மேலும் பார்க்க