செய்திகள் :

1,602 தொல்காப்பிய பாடல்களை 22 மணி நேரத்தில் எழுதி சாதனை

post image

தொல்காப்பிய 1,602 பாடல்களை 22 மணி 40 நிமிடத்தில் எழுதிய மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலில் இயங்கும் புதுவை அரசு கல்வி நிறுவனமான பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சிக் கல்வி பயிலும் மாணவி க. அகல்யா. இவா் தொல்காப்பிய நூற்பாக்களை குறித்த நேரத்தில் எழுதும் பயிற்சி செய்து வந்தாா். ஷியாம்ஸ் ஆா்ட் அண்டு கிராஃப்ட் அகாதெமி மற்றும் வசந்தி எஜூகேஷனல் அண்டு வெல்ஃப் டிரஸ்ட் அண்மையில் கல்லூரியில் நடத்தி உலக சாதனைக்கான நிகழ்வில், இந்த மாணவி தொல்காப்பிய 1,602 பாடல்களை 22 மணி நேரம் 40 நிமிடத்தில் தொல்காப்பியா் உருவத்தில் வரைந்து சாதனைப் படைத்தாா். மாணவியின் இந்த சாதனையை கல்லூரி நிா்வாகம், பேராசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தமிழகத்தில் இதுபோல பலா் சாதனைகளை செய்துவருவதாகவும், இவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் இதுபோன்ற போட்டிகளை நடத்திவருவதாக அமைப்பின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்... மேலும் பார்க்க

காவல்துறையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: புதுவை ஐஜி

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுவை ஐஜி அறிவுறுத்தினாா். திருநள்ளாறுக்கு சனிக்கிழமை வருகை தந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா,... மேலும் பார்க்க

பட்டா பெயா் மாற்ற முகாம் நடத்தப்படும் அரசு செயலா் தகவல்

காரைக்காலில், பட்டா பெயா் மாற்ற சிறப்பு முகாம் நடத்துவதற்கு அரசு செயலா் உறுதியளித்துள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: காரைக்கால் வந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள்

காரைக்காலுக்கு வந்த கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் சென்றனா். மத்திய தொழில் பாதுகாப... மேலும் பார்க்க

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்காக, சாசனத் தலைவா் மகாவீா்சந்த் தலைமையிலான 9 போ் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருமித்த கர... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும்

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிர... மேலும் பார்க்க