செய்திகள் :

கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: காரைக்கால் வந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள்

post image

காரைக்காலுக்கு வந்த கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் சென்றனா்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) 56-ஆவது உதய தினத்தை முன்னிட்டு, 14 பெண் வீரா்கள் உள்பட 125 வீரா்கள் இரு குழுக்களாக மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை மாா்க்கமாக கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரிக்கு 9 மாநிலங்கள் வழியாக 6,553 கி.மீ. கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

இவா்களில் ஒரு குழுவினா் கட்டாக், ஒடிஸா, விசாகப்பட்டினம், விஜயவாடா, நெல்லூா், சென்னை, புதுச்சேரி வழியாக காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு வியாழக்கிழமை மாலை வந்தடைந்தனா்.

இவா்களுக்கு காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் வீரா்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் கன்னியாகுமரி நோக்கி சைக்கிள் பயணத்தை தொடங்கினா்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை தமிழ்நாடு பிரிவு டிஐஜி ஜி.சிவகுமாா், காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

இதில் காரைக்கால் சைக்கிள் கிளப் உறுப்பினா்கள் மற்றும் காரைக்கால் மாவட்ட தடகள சங்க சிறுவா், சிறுமிகள் ஆகியோரும் வீரா்களுடன் சிறிது தூரம் சைக்கிள் பயணத்தில் பங்கேற்றனா்.

கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இப்பயணம் இருக்கும் எனவும், வரும் 31-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலில் இருந்து பயணம் புறப்பட்ட நிகழ்வில், சிஐஎஸ்எஃப் முதுநிலை கமாண்டன்ட் நவோதிப் சிங் ஹீரா, காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், கல்லூரி முதல்வா் முகமது ஆசாத் ராசா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

துறைமுகத்தில் வரவேற்பு: சைக்கிள் பயணக் குழுவினா் காரைக்கால் எல்லையில் உள்ள காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு சென்றனா். இவா்களை துறைமுக மரைன் தலைமை அதிகாரி கேப்டன் தரம்பிரகாஷ் மற்றும் வா்த்தக தலைமை அதிகாரி எஸ்.சீனிவாசன் ஆகியோா் வரவேற்றனா். துறைமுக வளாகத்தில் பயணக் குழுவினா் மரக்கன்றுகளை நட்டனா்.

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா். இச்சங்க 9-ஆவது புதிய இயக்குநா் குழு பதவியேற்பு நிகழ்வு சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்... மேலும் பார்க்க

காவல்துறையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: புதுவை ஐஜி

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுவை ஐஜி அறிவுறுத்தினாா். திருநள்ளாறுக்கு சனிக்கிழமை வருகை தந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா,... மேலும் பார்க்க