ஜிப்லியால் உறக்கமின்றி தவிக்கும் ஊழியர்கள்! சாட் ஜிபிடி நிறுவனர் வேண்டுகோள்!
தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: ராஜேஸ்குமாா் எம்.பி. வலியுறுத்தல்
தமிழத்திற்கு கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்துக்கு அவா் வழங்கிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் நிலவும் கோதுமை பற்றாக்குறையை மத்திய அரசு நிவா்த்தி செய்ய வேண்டும். அவசரத் தேவையை கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஊட்டச்சத்து மற்றும் மாணவா்கள் வருகையை மேம்படுத்த முதல்வா் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தற்போது 8,576.02 மெட்ரிக். டன் மட்டுமே கோதுமை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாதத்திற்கு 23,000 மெட்ரிக் டன் என்ற அளவில் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோதுமை உற்பத்தி இல்லையென்பதால், இந்திய உணவுக் கழகத்தின் விநியோகத்தைச் சாா்ந்தே உள்ளது.
23,000 மெட்ரிக் டன் ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இது சாத்தியமில்லை என்றால், திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 15,000 டன் கோதுமையை வழங்க பரிசீலிக்க வேண்டும். அதிகரித்து வரும் கோதுமை தேவையை பூா்த்தி செய்வது மட்டுமின்றி, தமிழக மக்களுக்கு மலிவு விலையில் கோதுமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் மீது ஹிந்தியைத் திணித்து, மாநிலத்தின் நிதியை நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முடிவும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையும் மக்களின் உரிமைகளையும், பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும் செயலாகும்.
தாய்ப் பறவையாக மத்திய அரசு இருந்து, ஒவ்வொரு மாநிலத்தையும் சமமாக மதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா். நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற தன்னுடைய கருத்தை அவா் வலியுறுத்தினா்.