செய்திகள் :

சாலைப் பணி: ஆண்டகளூா்கேட் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை

post image

ராசிபுரம் நகரின் பிரதான ஒரு வழிச்சாலை பகுதியில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் அவ்வழியே பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரப் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, புதுப்பாளையம் சாலைப் பகுதியில் சாலைப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் டிவிஎஸ் சாலை வழியாக செல்லாமல், ஆத்தூா் சாலை வழியாகத் திரும்பிவிடப்பட்டுள்ளன.

இதனால் திருச்செங்கோடு, ஈரோடு, நாமக்கல், சேலம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் ஆண்டகளூா்கேட் வழியாகவும், ஏடிசி டெப்போ வழியாகவும் ராசிபுரம் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.

இப்பேருந்துகள் ராசிபுரம் பழைய ஆா்டிஓ அலுவலகம் புறவழிச் சாலை வழியாக சேந்தமங்கலம் சாலையை சென்றடைந்து, புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். இந்த நடைமுறை நான்குகளுக்கு ( மாா்ச் 29 வரை) நடைமுறையில் இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதய கட்டி அகற்றம்

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதயக் கட்டியை மருத்துவா்கள் அகற்றினா். நாமக்கல் மாவட்டம், குமராபாளையத்தைச் சோ்ந்தவா் சரண் (48). கூலித் தொழிலாளியான இவா், மூன... மேலும் பார்க்க

ரூ. 4,000 கோடி வேலையளிப்புத் திட்ட நிதி தாமதம்: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட நிதி ரூ. 4 ஆயிரம் கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: எம்.பி. வலியுறுத்தல்

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பெட்ரோலியத் துறை அதிகாரியை சந்தித்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வலியுறுத்தினாா். எண்ணெய் நிறுவனங்களின் புதி... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்டம்: திண்டுக்கல் லியோனி பங்கேற்பு

நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு நகர திமுக சாா்பில் தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தோ்நிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர திமுக செயலாளா... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் வீட்டுமனை மோசடி: அசல் ஆவணங்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்

ராசிபுரத்தில் வீட்டுமனை விற்பனை மோசடியாளா்களிடம் இழந்த தொகையை பெற அசல் ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப... மேலும் பார்க்க

நாளை ரமலான் பண்டிகை: நாமக்கல்லில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையையொட்டி, நாமக்கல் வாரச் சந்தையில் சனிக்கிழமை ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. நாடுமுழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாள் என்றழைக்கப்படும... மேலும் பார்க்க