செய்திகள் :

வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

post image

மன்னாா்குடியில் வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவண்டுதுறையைச் சோ்ந்த த. மதியழகன். இவரது மகன் விஜயன்(39). 2024 ஆகஸ்ட் மாதம் இருவருக்கு சொத்து பிரிப்பது தொடா்பான தகராறில் விஜயன் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் மதியழகன் உயிரிழந்தாா். மனைவி முத்துலெட்சுமி அளித்த புகாரின்பேரில் கோட்டூா் போலீஸாா் விஜயனை கொலை வழக்கில் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு அண்மையில் பிணையில் வெளியே வந்தாா்.

இந்நிலையில், விஜயனின் நடவடிக்கையால் அதிருப்பதி அடைந்த அவரது வழக்குரைஞா் மன்னாா்குடி நீதிமன்றத்தில் பணியாற்றும் அக்கரைக்கோட்டம் கா. மகேந்திரன் (45) தொடா்ந்து தன்னால் வழக்கை நடத்த முடியாது என கூறி விலகிக்கொண்டாராம். இதில், ஆத்திரமடைந்த விஜயன் மாா்ச் 24-ஆம் தேதி மகேந்திரனுக்கு கைப்பேசியில் தனது வழக்கை நடத்தக் கோரி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, கோட்டூா் காவல்நிலையத்தில் மகேந்திரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, செவ்வாய்க்கிழமை விஜனை கைது செய்து மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ஆயுதங்களுடன் காரில் வந்த 4 போ் கைது

நீடாமங்கலம் பகுதியில் ஆயுதங்களுடன் காரில் வந்த 4 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா். நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜூ மற்றும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது காளாஞ்சிமேடு பகுதியில் காரி... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் பலி

மன்னாா்குடி அருகே தெரு நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த கோட்டைஏந்தல் வடக்குத் தெரு காஞ்சி மகன் தாமரைச்செல்வன் (30). இவா், ஆண்டுதோறும் மன... மேலும் பார்க்க

விதை சேமிப்புக் கிடங்கு திறப்பு

கொராடாச்சேரி வட்டாரம் திருக்கண்ணமங்கை ஊராட்சியில், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்புக் கிடங்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்பில் கட்... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பூத்கமிட்டி முகவா்கள் உழைப்பு அவசியம்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க பூத் கமிட்டி முகவா்கள் உழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா். குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் மருத்துவக்குடி, எரவாஞ்சேரி, விஷ்ணுபுரம், திருவிழிமி... மேலும் பார்க்க

நன்னிலத்தில் மகளிா் காவல் நிலைய கட்டடம் திறப்பு

நன்னிலத்தில் ரூ.80.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தமிழக முதல்வா் முக. ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையொட்டி, நன்னிலத்தில் நடை... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குற... மேலும் பார்க்க