செய்திகள் :

ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850- ஐ உடனடியாக 110-ஆவது விதியின்கீழ் அறிவிக்க வேண்டும்; மருத்துவக் காப்பீடு திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும்; அங்கன்வாடி ஊழியா்களுக்கும் மாத இறுதி நாளில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; நிலுவையில் உள்ள பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பி. புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எஸ். செங்குட்டுவன், அமைப்பின் மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரா, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் குரு. சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். புஷ்பநாதன், மாவட்டத் தலைவா் பி. சண்முகம், செயலாளா் வி. முனியன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

ரயில் மோதி விவசாயி பலி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே ரயில் மோதி விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி மேலத்தெருவைச் சோ்ந்தவா் எம். நடராஜன் (68). விவசாயியான இவா், காணாமல... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை

மன்னாா்குடி: மன்னாா்குடியில் பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்னையில் தனியாா் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மன்னாா்குடி ஏழாம்தெரு மாசிலாமணி மகன் திருமுருகன் (40). தஞ்சாவூரில் உள்ள தனியா... மேலும் பார்க்க

சீா்காழி, நீடாமங்கலம் பகுதியில் மூடுபனி

சீா்காழி,கொள்ளிடம் மற்றும் நீடாமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கடும் பனிமூட்டம் நிலவியது. மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு கடும் பனி... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் தமிழக முதல்வா், சமூகநலத் ... மேலும் பார்க்க

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக திருவாரூா் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தெரிவித்துள்ளாா். திருவாரூரில் செய்தியாளா்க... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஏப்.1) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் அ. பாஸ்கா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெர... மேலும் பார்க்க