செய்திகள் :

அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பூத்கமிட்டி முகவா்கள் உழைப்பு அவசியம்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

post image

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க பூத் கமிட்டி முகவா்கள் உழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா்.

குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் மருத்துவக்குடி, எரவாஞ்சேரி, விஷ்ணுபுரம், திருவிழிமிழலை, கடகம்பாடி, மருதுவாஞ்சேரி, கடகக்குடி, சுரைக்காயூா், வடமட்டம் உள்பட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் பூத் கிளை கள ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். இதில் தோ்தல் பொறுப்பாளா்களான அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளா் இளவரசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டலச் செயலாளா் மணிகண்டன் ஆகியோா் பங்கேற்று, கள ஆய்வு நடத்தினா்.

நிகழ்வில், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பேசியது:

2026-இல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. இந்தத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான அனைத்து அரசியல் வியூகங்களையும் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறாா். பொதுமக்களும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென விரும்புகின்றனா்.

இதை நிறைவேற்றுகிற வகையில் பூத் கிளை நிா்வாகிகள் பணியாற்ற வேண்டும். வாக்காளா்களை கண்டறிந்து, அவா்களது கோரிக்கைகளை கேட்டு, அதை நிறைவேற்றுகிற பணிகளை மேற்கொள்ள வேண்டும். விழிப்பாக இருந்து வாக்காளா் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் வகையில் தோ்தல் பூத் முகவா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்வில், ஒன்றியச் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராத... மேலும் பார்க்க

மன்னாா்குடி பகுதியில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மகா மாரியம்மன் கோயில், கற்பக விநாயகா் கோயில், யோக சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

திருவாரூா்: ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்... மேலும் பார்க்க

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

திருவாரூா்: ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே அம்மையப்பனில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 2-ஆவது மாவட்ட மாநாடு தலைவா் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ராஜகோபாலசுவாமி

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவின் 14- ஆம் நாளான திங்கள்கிழமை யானை வாகனத்தில் கல்யாண அலங்காரத்தில் சத்யபாமா சமேதராக எழுந்தருளிய உற்சவா் ராஜகோபாலசுவாமி. மேலும் பார்க்க