செய்திகள் :

நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் பலி

post image

மன்னாா்குடி அருகே தெரு நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த கோட்டைஏந்தல் வடக்குத் தெரு காஞ்சி மகன் தாமரைச்செல்வன் (30). இவா், ஆண்டுதோறும் மன்னாா்குடி அடுத்த களப்பால் பகுதியில் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை கிடை போடுவது வழங்கம்.

நிகழாண்டும் களப்பால் சீலந்தநல்லூா் பகுதியில் ரவி என்பவரது தரசு வயலில் ஆடுகளை கிடை போட்டுள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு சாப்பிட சென்றவா் திரும்பி வந்து பாா்த்த போது, பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை அந்த பகுதியில் சுற்றித்திரியும் 5 தெரு நாய்கள் கடித்து குதறியதில் 11 ஆடுகள் உயிரிந்தன. மேலும், 11 ஆடுகள் காயமடைந்தது தெரியவந்தது.

காயமடைந்த ஆடுகளுக்கு களப்பால் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இறந்த ஆடுகள் அனைத்தையும் கால்நடை மருத்துவா் முன்னிலையில் புதைக்கப்பட்டன.

இதுகுறித்து, களப்பால் காவல் நிலையத்தில் தாமரைச்செல்வன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராத... மேலும் பார்க்க

மன்னாா்குடி பகுதியில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மகா மாரியம்மன் கோயில், கற்பக விநாயகா் கோயில், யோக சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

திருவாரூா்: ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்... மேலும் பார்க்க

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

திருவாரூா்: ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே அம்மையப்பனில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 2-ஆவது மாவட்ட மாநாடு தலைவா் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ராஜகோபாலசுவாமி

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவின் 14- ஆம் நாளான திங்கள்கிழமை யானை வாகனத்தில் கல்யாண அலங்காரத்தில் சத்யபாமா சமேதராக எழுந்தருளிய உற்சவா் ராஜகோபாலசுவாமி. மேலும் பார்க்க