செய்திகள் :

தேசிய மூத்தோா் தடகளப் போட்டி: 9 பதக்கங்களை வென்ற நாமக்கல் மாவட்டம் அணி

post image

நாமக்கல்: தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில், நாமக்கல் மாவட்ட தடகள அணியினா் 9 பதக்கங்களை வென்றனா். இவா்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியா் ச.உமாவை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

பெங்களூரில் கடந்த 4-ஆம் தேதி முதல் 9 வரை தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில், தமிழ்நாடு அணியில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தடகள வீரா் மற்றும் வீராங்கனைகள் ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் மற்றும் 400 மீ. ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றனா்.

நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த வீராங்கனை லீலாவதி ஈட்டி எறிதல் போட்டியில் 1 தங்கப் பதக்கம், குண்டு எறிதலில் 1 வெள்ளிப் பதக்கம், கருப்பையா குண்டு எறிதல் போட்டியில் 1 வெள்ளிப் பதக்கம், மோகன்ராஜ் உயரம் தாண்டுதல் போட்டியில் 1 தங்கப் பதக்கம், 5,000 மீ. நடைபோட்டியில் 1 வெண்கலப் பதக்கம், அருள்மொழி என்பவா் 400 மீ. ஓட்டப் போட்டியில் 1 தங்கப் பதக்கம், உயரம் தாண்டுதலில் 1 வெள்ளிப் பதக்கம், நீளம் தாண்டுதலில் 1 வெண்கலப் பதக்கம் மற்றும் குமாா் என்பவா் தட்டு எறிதல் போட்டியில் 1 வெண்கலப் பதக்கம் வென்றனா்.

இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா, மாவட்ட மூத்தோா் தடகள சங்க செயலாளா் ஜி.சிவகுமாா், ஒருங்கிணைப்பாளா்கள் யுவராஜ், நாகராஜ் உள்பட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா?

நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 730 அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அங்கன்வாடி மையங்... மேலும் பார்க்க

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் தா்னா

நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல்-கரூா் மின்பகிா்மான வட்ட கிளைகள் சாா்பில், நாமக்கல் மேற்பாா்வைப்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா். தமிழகம் முழுவதும் மாா்ச் 3-இல் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வு 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாமக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் மூவா் பயணம் செய்தால் நடவடிக்கை: ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் மூன்று போ் பயணித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு: 30 சாதனையாளா்களுக்கு விருது வழங்கல்

பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய 30 சாதனையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா விருது வழங்கி கெளரவித்தாா். நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில்,... மேலும் பார்க்க

முடிதிருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வ... மேலும் பார்க்க