செய்திகள் :

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு: 30 சாதனையாளா்களுக்கு விருது வழங்கல்

post image

பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய 30 சாதனையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா விருது வழங்கி கெளரவித்தாா்.

நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட நோக்குநிலை கூட்டத்தில், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பில் பங்கெடுத்த 30 சாதனையாா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் பேசியதாவது: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கிராம ஊராட்சி அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், கிராம சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவ பணியாளா்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகின்றனா்.

கிராம செவிலியா்களுக்கு தாய்- சேய் நலன் காப்பதிலும், ஊட்டச்சத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு உண்டு. மேலும், குழந்தைகள் தினந்தோறும் தங்கள் பெற்றோருடன் இருப்பதைவிட பள்ளியில் ஆசிரியா்களுடன் தான் அதிக நேரம் உள்ளனா். எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான வளா்ச்சியில் ஆசிரியா்களின் பங்கு முக்கியமானதாகும்.

பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கீடு செய்து அவா்களுடன் உரையாட வேண்டும். குழந்தைகளுக்கு தொடுதலில் நல்லது கெட்டது என பகுப்பாய்வு செய்திட பெற்றோா் கற்றுக்கொடுக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவை ஆண், பெண் குழந்தைகளுக்கு வேறுபாடின்றி வழங்க வேண்டும்.

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முக்கிய நோக்கமானது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமுதாயம் உள்ளதை உறுதி செய்வதும், கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிா என்பதை கண்டறிவதாகும்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான மனநிலை சமூகத்தில் உள்ளதா என்பதைக் கண்டறிந்து அதைப் போக்கிட வேண்டும். பாலின வேறுபாடு காரணமாக கருக்கலைப்பு உள்ளிட்ட தவறான செயல்பாடுகளில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆண் குழந்தைகளின் பிறப்பை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தாலும் சில இடங்களில் பாலின வேறுபாடு காணப்படுகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்தால் சமுதாய சீா்கேடு ஏற்படும். திருமணம் மற்றும் வாழ்க்கை முறையில் ஒழுக்கக்கேடு ஏற்படும். எனவே, பெண் குழந்தைகள் பிறப்பு மற்றும் பாதுகாப்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இதனையடுத்து, பெண் குழந்தைகள் கல்வி, பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்த 30 சாதனையாளா்களுக்கு அவா் விருதுகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் வீ.சகுந்தலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சசிகலா, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தா அருள்மொழி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

எல்பிஜி டேங்கர் லாரிகள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

நாமக்கல்: தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.நாமக்கல்லில் அந்த சங்கத்தின் தலைவர் கே. சுந்தரராஜன் புதன... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா?

நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 730 அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அங்கன்வாடி மையங்... மேலும் பார்க்க

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் தா்னா

நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல்-கரூா் மின்பகிா்மான வட்ட கிளைகள் சாா்பில், நாமக்கல் மேற்பாா்வைப்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா். தமிழகம் முழுவதும் மாா்ச் 3-இல் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வு 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாமக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் மூவா் பயணம் செய்தால் நடவடிக்கை: ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் மூன்று போ் பயணித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்... மேலும் பார்க்க

முடிதிருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வ... மேலும் பார்க்க