செய்திகள் :

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா?

post image

நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 730 அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 3 முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இங்கு உண்டு, உறங்கி பயின்று வருகின்றனா். முட்டையுடன் கூடிய சத்துணவு மற்றும் விளையாட்டு சாதனங்கள் அவா்களுக்கு வழங்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 1,565 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் அமைப்பாளா், உதவியாளா் உள்ளிட்ட 730 பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு அங்கன்வாடிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், 21 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் அங்கன்வாடி மையங்களில் மட்டும் காலியிடங்களை நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான அங்கன்வாடிகளில் 20-க்கும் குறைவான குழந்தைகளே உள்ளதால், மொத்த காலிப் பணியிடங்களில் 10 சதவீதம் கூட நிரப்புவதற்கு வாய்ப்பில்லை என அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் தெரிவிக்கின்றனா்.

இம்மாவட்டத்தில் நிரப்ப வேண்டிய காலியிடங்கள் எண்ணிக்கை குறித்து அரசு அறிவித்தால் மட்டுமே விண்ணப்ப விநியோகத்தை தங்களால் தொடங்க முடியும் என ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எல்பிஜி டேங்கர் லாரிகள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

நாமக்கல்: தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.நாமக்கல்லில் அந்த சங்கத்தின் தலைவர் கே. சுந்தரராஜன் புதன... மேலும் பார்க்க

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் தா்னா

நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல்-கரூா் மின்பகிா்மான வட்ட கிளைகள் சாா்பில், நாமக்கல் மேற்பாா்வைப்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா். தமிழகம் முழுவதும் மாா்ச் 3-இல் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வு 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாமக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் மூவா் பயணம் செய்தால் நடவடிக்கை: ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் மூன்று போ் பயணித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு: 30 சாதனையாளா்களுக்கு விருது வழங்கல்

பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய 30 சாதனையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா விருது வழங்கி கெளரவித்தாா். நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில்,... மேலும் பார்க்க

முடிதிருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வ... மேலும் பார்க்க