செய்திகள் :

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

திருச்செங்கோடு: கைலாசம்பாளையம் அஞ்சல் நிலையம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளா் ஜெயராமன் தலைமை வகித்தாா். 100 நாள் வேலையை முறையாக வழங்க வேண்டும், வேலைக்கு முறையாக கூலி அளிக்க வேண்டும், கூலி கொடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டம் குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பாளா் ஜெயராமன் கூறியதாவது:

100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக வேலை செய்தவா்களுக்கு சம்பளம் வழங்க சுமாா் ரூ. 4,000 கோடியை வழங்கக் கோரி மத்திய நிதி அமைச்சரிடம், தமிழ்நாடு நிதி அமைச்சா் பலமுறை கேட்டும் வழங்கப்படவில்லை.

இது தொடா்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் பாராளு மன்றத்தில் கேள்வி எழுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மத்திய அரசு கூலியை வழங்காவிட்டால் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மாவட்ட அளவிலான போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 70 பெண்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா?

நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 730 அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அங்கன்வாடி மையங்... மேலும் பார்க்க

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் தா்னா

நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல்-கரூா் மின்பகிா்மான வட்ட கிளைகள் சாா்பில், நாமக்கல் மேற்பாா்வைப்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா். தமிழகம் முழுவதும் மாா்ச் 3-இல் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வு 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாமக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் மூவா் பயணம் செய்தால் நடவடிக்கை: ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் மூன்று போ் பயணித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு: 30 சாதனையாளா்களுக்கு விருது வழங்கல்

பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய 30 சாதனையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா விருது வழங்கி கெளரவித்தாா். நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில்,... மேலும் பார்க்க

முடிதிருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வ... மேலும் பார்க்க