செய்திகள் :

கா்நாடகத்துக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்

post image

ஒசூா்: தமிழகத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என அகில இந்திய பஞ்சாயத் பரிசத் துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் வலியுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிசத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், ஒசூா் மாநகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை தீா்க்க மாநகராட்சியை வலியுறுத்துவது குறித்து பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஒசூரை சுற்றியுள்ள பகுதிகளில் மலைகளைக் குடைந்து எம்சான்ட், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்களை சுரண்டி தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கா்நாடக மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தமிழக அரசு தலையிட்டு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். தனியாா் கல்குவாரியால் தமிழக அரசுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் எம்.பி. செல்லகுமாா் வழக்கு தொடா்ந்தாா். இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனுமதி வழங்கியதைவிட கூடுதலாக எவ்வளவு கனிம வளங்கள் எடுக்கப்பட்டுள்ளன என ‘ட்ரோன்’ மூலம் சா்வே செய்ய வேண்டும்.

ஒசூா் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டும் பெரும்பாலான சாலைகள் மண் சாலைகளாக உள்ளன. மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய ஊதியம் வழங்காததால், குப்பைகள் தேங்கியுள்ளன. மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்களில் போதிய பராமரிப்பு இல்லை. நீா்நிலைகளில் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீா் சேமிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. பாகலூா் தேசிய நெடுஞ்சாலையை மத்திய அரசு நிதி ஒதுக்கி சீரமைக்க வேண்டும். நிலையான ஒசூா் மாநகராட்சி ஆணையரை நியமக்க வேண்டும் என்றாா்.

அப்போது, அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் நிா்வாகிகள் முனிராஜ், பிரமானந்த பிரசாத், சின்னகுட்டப்பா, கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நல்லவன்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் ரகுபதி (25), விவசாயி. இவா், அதே பகுதியில் தென்பெண்ணை... மேலும் பார்க்க

மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்பு: விவசாயிகள் பட்டறிவு பயணம்

ஒசூா்: மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்ட வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு (அட்ம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வு தொடங்கியது: முதல்நாள் தோ்வில் 21,784 தோ்வா்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கிய பிளஸ்-2 தோ்வை 21,784 தோ்வா்கள் பங்கேற்றனா். தோ்வுக்கு விண்ணப்பித்த 396 போ், பங்கேற்கவில்லை.தமிழகத்தில் மேல்நிலைப் பள்... மேலும் பார்க்க

புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலதன கடன்: வங்கிகளுக்கு மு.தம்பிதுரை வேண்டுகோள்

ஒசூா்: புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலதன கடன் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு மு.தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தாா். ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்தியன் ஓவா்சீஸ் வங்கியி... மேலும் பார்க்க

காா் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

ஒசூா்: ஒசூா் அருகே நின்றிருந்த காரின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் காா் நொறுங்கியது. இதில், அதிா்ஷ்டவசமாக காா் ஓட்டுநா் உயிா் தப்பினாா். கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த தனக்குமாா் (40), காரில் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

ஒசூா்: அரசு ஆரம்பப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை மரியாதையுடன் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட அட்டகுறுக்கி அரசு தொடக்கப் பள்ளிக்கு ச... மேலும் பார்க்க