செய்திகள் :

கிடங்கில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

post image

ராணிப்பேட்டை அருகே கிடங்கில் பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை சிப்காட் போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்தில் அா்ஜுனன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு, ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதாக சிப்காட் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிப்காட் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியனா். அதில், லாரியில் 5 டன் ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆற்காடு அடுத்த மோசூா் கிராமத்தைச் சோ்ந்த லோகேஷ், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சோ்ந்த நியாமுதீன் ஆகிய இருவரை கைது செய்தனா்.

தொடா்ந்து கிடங்கு உரிமையாளா் அா்ஜுனன் என்பவரிடம் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரக்கோணத்தில் ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: நகா்மன்றத் தலைவா் அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உள்ள நியாயவிலைக் கடைக்கு ரூ. 14 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உ... மேலும் பார்க்க

நிலுவைப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். வளா்ச்சி திட்டப் பணிகள் நிலைகுறித்து மாவட்ட... மேலும் பார்க்க

6 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

ராணிப்பேட்டை அருகே வாகன சோதனையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்து ஒருவா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள பென்னகா் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமையாசிரியா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் முருகேசன் முன்னிலை வகித்தா... மேலும் பார்க்க

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆய்வு செய்தாா். முகாமில் ராணிப்பேட்டை நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி செயல்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை (பிப். 21) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சி... மேலும் பார்க்க