செய்திகள் :

கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி முகாம் தொடக்கம்

post image

மன்னாா்குடியில் முகாமை தொடங்கிவைத்து, பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

மன்னாா்குடி, பிப். 20: மன்னாா்குடி கால்நடை மருத்துவமனையில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் (2024-2025) கருச்சிதைவு நோய் 5-ஆம் கட்ட தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

இம்முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தொடங்கி வைத்து, கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பாா்வையிட்டாா். முகாமின் நோக்கம் குறித்து, கால்நடைத்துறையினா் தெரிவித்தது:

பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் புரூசெல்லோசிஸ் என்கிய நோயை தடுக்கும் வகையில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சலும், சினை மற்றும் ஈன்றும் தருவாயில் (5 முதல் 8 மாத கா்ப்ப பருவத்தில்) கருச்சிதைவும் ஏற்படுகிறது. இந்த நோயால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நோய்வாய்ப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில் மனிதா்களுக்கும் இந்த நோய் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் செலுத்தப்படும். திருவாரூா் மாவட்டத்தில், இத்திட்டத்தின் ஐந்தாவது தவணை தடுப்பூசி பிப்.20 முதல் மாா்ச்19-ஆம் தேதி வரை செலுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக் கொண்டால் அந்த கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிா்ப்பு சக்தி கிடைக்கப்பெறும்.

இந்த தடுப்பூசி திட்டமானது 4 மாதங்களுக்கு ஒருமுறை 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு செலுத்தப்பட உள்ளது. காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது எனத் தெரிவித்தனா்.

இம்முகாமில், கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநா் எம். ஹமீதுஅலி, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் ஜெ. ஈஸ்வரன், வட்டாட்சியா் என். காா்த்தி, கால்நடை ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற பிரசா... மேலும் பார்க்க

ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் குறித்து ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்று வழங்குவது குறித்த ஆய்வு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, விளத்தூா், ஆப்பரகுடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஆறுகளில் நாணல்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் உள்ள நாணல்களையும், மண்திட்டுகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) உள்ளது. இந்த அணைக்கு மேட்டூ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சி நிதியளிப்பு கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஐ ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் ச... மேலும் பார்க்க

அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் அனைத்து வங்கிகளின் கூட்டமைபின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்மாளத்தெரு பரோடா வங்கி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி ... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மன்னாா்குடியில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்ஜிஆா் நகா் கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க