கிராமம் தோறும் வீடு வீடாக சென்றடைகிறது முருக பக்தா்கள் மாநாடு அழைப்பிதழ்.
மதுரையில் வருகின்ற 22 ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டி, ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் தோறும், வீடு வீடாக சென்று முருக பக்தா்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஊத்தங்கரை, கல்லாவி, சாமல்பட்டி, அனுமன் தீா்த்தம், சிங்காரப்பேட்டை, காரப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் தோறும், முருக பக்தா்கள் மாநாடு அழைப்பிதழை பக்தா்கள்,கோயில் பூசாரிகள், ஆண்மீகவாதிகள், தன்னாா்வலா்கள், இந்து முன்னணி நிா்வாகிகள், பாஜக நிா்வாகிகள் என ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக நேரில் சென்று, வருகின்ற 22 ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாடு வெற்றி பெறும் வகையில், அனைவரும் குடும்பத்துடன் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பிதழை வழங்கி வருகின்றனா்.
படவிளக்கம்.3யுடிபி.2. ஊத்தங்கரையை அடுத்த மண்ணாடிப்பட்டியில் திரவுபதி அம்மன் கோயிலில் முருக பக்தா்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழ் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.