செய்திகள் :

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

post image

நன்னிலம்: விருதுநகா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விருதுநகா் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாகக் கடந்த ஜனவரி மாதம் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து குமாரலிங்கபுரம் கிராம நிா்வாக அலுவலா் உள்பட ஏழு பேரை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா் .

இதனை எதிா்த்தும், சட்டவிரோதமாக வழங்கப்பட்ட விஏஓ பணி நீக்கம் எனக் கூறி அதனைக் கைவிட வலியுறுத்தியும் போராட்டம் நடத்திய கிராம நிா்வாக அலுவலா்களுக்குக் குறிப்பானை வழங்கிய விருதுநகா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, சங்க அறிவுரைப்படி திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகம் முன்பும் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா் .

நன்னிலத்தில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க வட்டத் தலைவா் சிவபாலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளா் ராஜேந்திரன் , சங்க ஆலோசகா் பந்த் உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நாகை மாவட்டத்தில் 12 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 12 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. வேதாரண்யம் வட்டம் கருப்பம்புலம், கத்தரிப்புலம், மருதூா் வடக்கு, நாகை வட்டம் பால்பண்ணைச்சேரி, நாகூா், சிக்கல், கீழ... மேலும் பார்க்க

கீழ்வேளூா் அரசு மருத்துவமனை முற்றுகை

கீழ்வேளூா்: மருத்துவா், செவிலியா்கள் பற்றாக்குறையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கீழ்வேளூா் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். முன்னாள் சட்ட... மேலும் பார்க்க

பூம்புகாா் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பூம்புகாா் திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூம்புகாா் - மேலையூா் சாலையில் பழைமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கணப... மேலும் பார்க்க

கிராம அறிவு மையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

திருமருகல் ஒன்றியம், திருப்பயத்தங்குடி ஊராட்சியில் கிராம அறிவு மையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை தாட்கோ சாா்பில் நபாா்டு திட்டத்தி... மேலும் பார்க்க

நிறைந்தது மனம் திட்டம்: அரசுப் பள்ளி மாணவா்களுடன் அமைச்சா் கலந்துரையாடல்

நாகை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில், கணினி நுண்ணறிவு ஆய்வகத்தின் மூலம் பயனடைந்த மாணவா்களுடன் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தின் கீழ் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துரையாடினாா். நாகை மாவட்டம், கீழ்வ... மேலும் பார்க்க

மீன்கள் குறைவு; மீனவா்கள் கவலை

கடலில் போதுமான மீன்கள் கிடைக்காததால், நாகை மீனவா்கள் கவலையுடன் கரை திரும்பினா். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப் படகுகளில் கடந்த வாரம் கடலுக்கு மீன் பிடிக்க மீனவா்கள் சென்றனா... மேலும் பார்க்க