செய்திகள் :

கிரீஸ் நாட்டில் கனிமொழி எம்பி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு!

post image

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவினர் கிரீஸ் நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலையான கொள்கையை எடுத்துரைக்க, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ்-க்கு நேற்று (மே 27) சென்றடைந்தனர்.

கிரீஸின் நாடாளுமன்ற ஆணையத்தின் உறுப்பினர்களுடன், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு ஆகிய துறைகள் குறித்து ‘அர்த்தமுள்ள உரையாடலை’ மேற்கொள்ளவும், இந்தியா - கிரீஸ் நட்புறவை வலுப்படுத்தவும் ஸ்லோவேனியாவைத் தொடர்ந்து கிரீஸ் சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தக் குழுவினர் இன்று (மே 28) கிரீஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் டாசோஸ் ஹட்ஜிவாசிலியோவை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

இதுகுறித்து, கிரீஸ் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்தின் எக்ஸ் வலைதளப் பதிவில், அனைத்துக் கட்சிக் குழுவினர் அமைச்சர் ஹட்ஜிவாசிலியோவுடன் கணிசமான மற்றும் பயனுள்ள உரையாடலில் ஈடுப்பட்டதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத் தன்மையைக் குறித்து எடுத்துரைத்தாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதல்கள் குறித்து சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க 7 அனைத்துக் கட்சிக் குழுவினர் 33 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதில், திமுகவின் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவில் ராஜீவ் குமார் (சமாஜ்வாடி), பிரிஜேஷ் சௌத்தா (பாஜக), பிரேம் சந்த் குப்தா ( ஆர்ஜேடி), அஷோக் மிட்டல் (ஆம் ஆத்மி) மற்றும் மஞ்சீவ் சிங் புரி (ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேபாளத்துக்கான முன்னாள் தூதர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:

நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ்(75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா; பதற்றம் வேண்டாம்.. என்ன செய்ய வேண்டும்?: மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் வகையிலான கரோனா தொற்றுப் பரவி வருகிறது. ஆனால், கரோனா குறித்து யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ... மேலும் பார்க்க

இன்று ஒரே நாளில் அரசுப் பணிகளிலிருந்து 8,144 பேர் பணி ஓய்வு

சென்னை: இன்று தமிழக அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 பேர் ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் பணி ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும்,... மேலும் பார்க்க

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க