செய்திகள் :

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக் கூடாதா? வீழ்கிறதா கோடிங்? 6000 பேரை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட்

post image

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையின் காரணம் குறித்து அதன் தலைமை செயல் நிர்வாகி சத்யா நாதெல்லா விளக்கம் கொடுத்துள்ளார்.

நாதெல்லா கொடுத்திருக்கும் விளக்கத்தில், இந்த பணிநீக்க நடவடிக்கையானது, நிறுவனத்தின் உள் கட்டமைப்புகளின் சீரமைப்பு பணிக்காக எடுக்கப்பட்டதே தவிர, பணியாளர்களின் செயல்திறன் அடிப்படையிலானது அல்ல.

இது செயல்திறனை விட மறுசீரமைப்பு பற்றியது, என்று தலைமை நிர்வாக அதிகாரி மைக்ரோசாப்ட் ஊழியர்களிடம் கூறினார், அதே நேரத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டின் ஒரு பகுதியாக, எதிர்காலம் இருப்பதாக நம்பும் செயற்கை நுண்ணறிவில் (AI) அதிக கவனம் செலுத்தும் வகையில்தான், நிறுவனம் அதன் முன்னுரிமைகளை மறுசீரமைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட் அலுவலக டவுன் ஹால் கூட்டத்தில் பேசிய மைக்ரோசாப்ட் தலைமை பிராடக்ட் அதிகாரி அபர்ணா சென்னபிரகதா, செயற்கை நுண்ணறிவு வருகையால், கோடிங் அல்லது கணினி அறிவியல் படிப்பது வீணாகிப் போகிறது என்ற கருத்தை தான் முற்றிலும் ஏற்கவில்லை என்று கூறுகிறார்.

"மக்கள் கணினி அறிவியலைப் படிக்கக்கூடாது அல்லது கோடிங் செத்துவிட்டது என்ற கருத்தை நான் அடிப்படையில் ஏற்கவில்லை," என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் அதிக செயற்கை நுண்ணறிவுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்க 80 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திறன்களை விரிவுபடுத்துவதையும், பல்வேறு தளங்கள் மற்றும் சேவைகளில் அதன் உதவிகளை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் முன்னுரிமைகளில் ஏற்படும் இந்த மாற்றம்தான், பல்வேறு பணிநிலைகளுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

குறிப்பாக தயாரிப்பு மேம்பாடு மற்றும் பொறியியலில், அவை மறுசீரமைக்கப்படுகின்றன அல்லது படிப்படியாக சிலவற்றை அகற்றும் நிலை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

விமான தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 ரஷிய விமானங்கள் வீழ்ந்தன!

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 ரஷிய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பான விடியோக்கள் இணையத்தில் பரவிவருகின்றன.உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் இரவு முதல் நேற்... மேலும் பார்க்க

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 21 தடகள வீரர்கள் பலி

நைஜீரிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓகுன் மாநிலத்தின் தெற்கே சுமார் 1000 கிமீ தொலைவில் நடைபெற்ற 22வது தேசிய விளையாட்டு விழாவில... மேலும் பார்க்க

போர் நிறுத்த ஒப்பந்தம்! ஹமாஸின் கூற்றை மறுத்த அமெரிக்கா!

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஹமாஸின் கூற்றை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை.இஸ்ரேல் - காஸா இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில்... மேலும் பார்க்க

அணு ஆயுத ஒப்பந்தம்! அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் பதில் என்ன?

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாதென்றும், அந்நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அமெரிக்க முன்ன... மேலும் பார்க்க

யார் இந்த உலக அழகி? இந்தாண்டு பட்டம் வென்றவர்!

உலக அழகிப் போட்டியில் ஓபல் சுச்சாட்டாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டது.தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதில் 72-வது உலக அழகிப் போட்டி, மே 10 தேதி தொடங்கி சனிக்கிழமை (மே 31) ஆம் தேதிவரையில் நடைபெற்றது. இந்தியாவ... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியத்துக்கு இருமடங்கு வரி: டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளா்களை வெகுவாக பாதிக்கும் என்று... மேலும் பார்க்க