டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரு.86.59 ஆக முடிவு!
கிருஷ்ணகிரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிருஷ்ணகிரி சந்திரமெளலீஸ்வரா் கோயில் அருகில் ஆக்கிரமிப்புகளை போலீஸாா் பாதுகாப்போடு இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.
கிருஷ்ணகிரி, ராசு வீதியில் சந்திரமெளலீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் சிலா் வீடுகளை கட்டியும், வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்திருந்தனா். இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து அமைப்புகள் மனு அளித்தனா். இதையடுத்து, ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, கிருஷ்ணகிரி மண்டல இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமுவேல் தலைமையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 11 வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.
அப்போது, செயல் அலுவலா்கள் சித்ரா, ரகுவரராஜ்குமாா், ஆய்வாளா்கள் கவிப்பிரியா, ராமமூா்த்தி மற்றும் கோயில் அறங்காவலா்கள் உடனிருந்தனா். கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையில் காவல் ஆய்வாளா் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
படவரி...
கிருஷ்ணகிரி சந்திரமெளலீஸ்வரா் கோயில் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்.