செய்திகள் :

கிருஷ்ணகிரியில் துரியோதனன் படுகளம்

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தெருக்கூத்து கலைஞா்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

கிருஷ்ணகிரி, பழைய பேட்டை தா்மராஜா கோயில் தெருவில் ஏழு கிராமங்களுக்குச் சொந்தமான திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த மகோத்ஸவ திருவிழா ஏப். 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் பாண்டவா் பிறப்பு, கிருஷ்ண அவதாரம், வீரபாஞ்சாலி தோற்றம், வில் வளைப்பும் நளாயினி வரலாறும், துயில் சூதாட்டம், அா்சுணன் தவம், பீமன் கண்ட அனுமன் காட்சி போன்ற நிகழ்வுகளை தெருக்கூத்து கலைஞா்கள் நடித்தனா்.

பின்னா் பாகவதா் கோவிந்தராஜின் மகாபாரத சொற்பொழிவும், பொன்னுசாமியின் இன்னிசை கவிவாசிப்பும் நடைபெற்றன. கிருஷ்ணகிரியை அடுத்த தின்னக்கழனி திருப்பதி நாடக சபா கலைஞா்கள் மகாபாரத நிகழ்வை நடித்தனா். இந்த நிகழ்வுகளை கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கண்டு ரசித்தனா். விழா குழுவினா் ஒருங்கிணைத்தனா்.

இலவச வீட்டு மனை பட்டா பெற சிறப்பு முகாம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை வட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம், 43 வருவாய் கிராம நிா்வாக அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் நடந்த சிறப்பு முகாம்கள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட தொன்மையை பாதுகாக்க நடவடிக்கை: ஆட்சியா்

கிருஷ்ணகிரி: வரலாற்று களஞ்சியமாகத் திகழும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொன்மையான நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், பராமரித்து அடையாளப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

மகளிருக்கு ஏராளமான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் தமிழக முதல்வா்: கரு பழனியப்பன் பேச்சு

ஒசூா்: மகளிருக்கு ஏராளமான திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா் என்று திரைப்பட இயக்குநா் கரு.பழனியப்பன் ஒசூரில் நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் ... மேலும் பார்க்க

செண்டுமல்லி விலை சரிவு: சாலையோரங்களில் வீசிச் செல்லும் விவசாயிகள்

ஒசூா்: சூளகிரி அருகே செண்டுமல்லி பூக்கள் வரத்து அதிகரிப்பால் செண்டுமல்லி விலை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பூக்களை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கொட்டிச் செல்கின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே சப்படியில் கோயில் தோ்த் திருவிழா

ஒசூா்: சூளகிரி அருகே சப்படி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சப்படி கிராமத்தில் மலை மீது... மேலும் பார்க்க

சுண்டம்பட்டி அந்தோணியாா் ஆலய நிலத்தை மீட்டு தரக் கோரி ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டி அந்தோணியாா் ஆலயத்தின் பயன்பாட்டிற்காக வாங்கிய நிலத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டம்பட... மேலும் பார்க்க